

தில்லி - ஷாங்காய் இடையே 6 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் நேரடி விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கியுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில், இந்தியா - சீனா இடையேயான நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டிருந்தத நிலையில், சுமார் 6 ஆண்டுகளுக்குப்பின் 2026, பிப்ரவரியில் இருநாடுகளுக்குமிடையே மீண்டும் நேரடி விமானம் இயக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஷாங்காய் மாநகரின் புடோங் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புது தில்லிக்கு 230 பயணிகளுடன் ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானம் இன்று(பிப். 1) காலை புறப்பட்டது என்று இந்தியத் தூதரக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மக்கள் தொடர்பு, வணிகம், கல்வி உள்பட நிறுவன ரீதியான தொடர்பு ஆகியவற்றுக்கு இந்த விமான சேவை பலனிக்கும் என்று இந்தியத் தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Air India resumes direct Shanghai-New Delhi flights after nearly six years
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.