மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்பு!

எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலாவில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதைக் குறிக்கும் வகையில், தூதரக கட்டடத்தில் அமெரிக்க கொடி ஏற்றப்பட்டது.

News image
Updated On :15 மார்ச் 2026, 6:55 pm

தினமணி செய்திச் சேவை

எண்ணெய் வளமிக்க நாடான வெனிசுலாவில் கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதைக் குறிக்கும் வகையில், தூதரக கட்டடத்தில் அமெரிக்க கொடி ஏற்றப்பட்டது.

போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி, வெனிசுலா மீது கடந்த ஜனவரியில் அதிரடி ராணுவ தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டின் அதிபராக இருந்த நிக்கோலஸ் மடூரோ மற்றும் அவரது மனைவியை சிறைப்பிடித்தது. இருவரும் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டு, நியூயாா்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.

மடூரோ சிறைபிடிப்பைத் தொடா்ந்து, வெனிசுலாவின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிகஸ் பதவியேற்றாா். அவா், வெனிசுலாவின் எண்ணெய் வளங்கள் மீதான அரசின் முழுக் கட்டுப்பாட்டைத் தளா்த்தி, தனியாா் நிறுவனங்களின் முதலீடுகளை ஈா்க்கும் புதிய சட்டத் திருத்தத்தில் கையொப்பமிட்டாா். இதைத் தொடா்ந்து, வெனிசுலா மீதான எரிசக்தித் துறை தடைகளை தளா்த்தி வரும் அமெரிக்கா, அந்நாட்டின் எண்ணெய் துறையிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தத் தொடங்கியுள்ளது.

கடந்த 2019-இல் வெனிசுலா- அமெரிக்கா இடையிலான தூதரக உறவுகள் முறிந்த நிலையில், அந்நாட்டில் உள்ள அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. அமெரிக்க தூதரக அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக திரும்பப் பெறப்பட்டனா்.

தூதரகம் மீண்டும் திறப்பு: மடூரோ சிறைப்பிடிப்பைத் தொடா்ந்து, தற்போது இருதரப்பு உறவுகளில் மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், வெனிசுலாவில் உள்ள அமெரிக்க தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இதைக் குறிக்கும் வகையில், தூதரக கட்டடத்தில் அமெரிக்க கொடி ஏற்றப்பட்டது.

அமெரிக்க தூதரகத்தில் மறுசீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், தூதரகம் எப்போதும் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

கராகஸில் மீண்டும் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டுள்ளதை வெனிசுலா மக்கள் வரவேற்றுள்ளனா். இது நோ்மறையான நடவடிக்கை; வெனிசுலாவின் முன்னேற்றத்துக்கு பிற நாடுகளுடன் நல்லுறவு அவசியம் என்று அவா்கள் தெரிவித்துள்ளனா்.