ரஷியாவுடனான போரில் சுமார் 55,000 உக்ரைன் வீரர்கள் பலியானதாக வொலோதிமீர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷியா - உக்ரைன் இடையிலான போர் தொடங்கி, சுமார் 4 ஆண்டுகளான நிலையில், இந்தப் போரில் 55,000 உக்ரைன் வீரர்கள் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இரு நாடுகளுக்கிடையேயான போரை நிறுத்துமாறு உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும்நிலையில், போர் நிறுத்தத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
2022 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் போரில், இரு தரப்பிலும் சுமார் 5 லட்சம் பேர் பலியானதாகவும், சுமார் 15 லட்சம் பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
2025 பிப்ரவரி மாதத்தில் சுமார் 46,000-க்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் பலியானதாக ஸெலென்ஸ்கி கூறியிருந்தார்.
இருப்பினும், இந்தப் போரில் ரஷியாவின் தரப்பில் 3.25 லட்சம் பேரும், உக்ரைன் தரப்பில் 1.4 லட்சம் பேரும் பலியாகியிருக்கலாம் என்று சர்வதேச ஆய்வுகள் மையத்தின் அறிக்கை கூறுகிறது.
Summary
Ukraine's president Zelenskyy says 55,000 troops killed so far
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உக்ரைனில் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ரஷியா தாக்குதல்!

உக்ரைன் - ரஷியா போரில் 49 இந்தியா்கள் உயிரிழப்பு : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

உக்ரைனிடம் 528 ராணுவ வீரா்களின் உடல்களை ஒப்படைத்தது ரஷியா

உக்ரைன் சிறுவா்கள் கடத்தல்: ரஷிய அதிகாரிகளுக்கு ஐரோப்பா தடை
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike




