பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் உள்ள ஷியா பிரிவு மசூதியில் வெள்ளிக்கிழமை(பிப். 6) தொழுகையின்போது தற்கொலைப் படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 31 போ் உயிரிழந்தனா்; மேலும் 169 போ் காயமடைந்தனா். மேற்கண்ட கொடுங்குற்றச் செயலில் தொடர்புடையவர்களைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையில், தற்கொலைப்படைத் தாக்குதலை நிகழ்த்தியதாகக் கருதப்படும் நபர் யாசிர் என்று அடையாளம் காணப்பட்டது. அவரது பின்புலத்தை ஆராய்ந்ததில், பேஷாவரில் அவர் வசித்து வந்ததை அதிகாரிகள் உறுதி செய்தனர். இந்தத் தாக்குதலுக்கு முன், அவர் சுமார் 5 மாதங்கள் ஆப்கானிஸ்தானில் தங்கியிருந்து, பயங்கரவாத தாக்குதல்களுக்கான பயிற்சி பெற்று வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.