உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் செயலிகளை மக்கள் பயன்படுத்தவைக்கும் நோக்கில், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் செயலிகளை ரஷிய அரசு நீக்கியிருக்கிறது.
ரஷியாவில், இணையதளத்தில் செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு எடுத்திருக்கும் மிக முக்கிய நடவடிக்கையால் கிட்டத்தட்ட 100 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
வாட்ஸ்ஆப் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தளத்தில், இன்று ரஷிய அரசு, அந்நாட்டில் உள்ள அனைத்து செல்போன்களிலிலும் வாட்ஸ்ஆப்பை நீக்கியிருக்கிறது. அந்நாட்டு மக்கள் உள்நாட்டுத் தயாரிப்பு செயலிகளைப் பயன்படுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதனால் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் ரஷிய மக்களின் பாதுகாப்பில் குறைபாடுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.
பயனர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்க அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து டெலிகிராம் நிறுவனம் தெரிவிக்கையில் இது ஒரு நாட்டு அரசின் நடவடிக்கை, நிறுவனத்தின் கொள்கைகளுக்குள் இது வரவில்லை. எங்கள் நிறுவனத்தின் கொள்கை மக்களின் சுதந்திரம், தனியுரிமை. இதில் அழுத்தத்துக்கு இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான தாக்குதலின்போது, வெளிநாட்டு தொழில்நுட்ப சேவை நிறுவனங்களுக்கும், ரஷிய அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக, ரஷிய அரசு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் செயலிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மேக்ஸ் என்ற செயலி உருவாக்கப்பட்டது. ஆனால், இது மக்களை கண்காணிக்க உருவாக்கப்பட்டதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
பயனர்களின் சாட் தகவல்கள், தனியுரிமை பாதுகாப்புக்குரியது என்று வாட்ஸ்ஆப் கூறி வருகிறது. அந்த தகவல்களை உளவு பார்க்க, ரஷிய அரசிடம் தர வாட்ஸ்ஆப் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, மக்களை கண்காணிக்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ் செயலியை பயன்படுத்த அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருகிறது.
Summary
100 million people are suffering due to the removal of WhatsApp in Russia.

இந்தியா்களின் தன்மறைப்பு உரிமையுடன் விளையாடக் கூடாது: மெட்டா, வாட்ஸ் ஆப்பிடம் உச்சநீதிமன்றம் காட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழந்தை பிறப்பு சான்றிதழ்: வாட்ஸ் அப் வழியாக பெறும் வசதி - மாநகராட்சி அறிமுகம்

வாட்ஸ் ஆப் மூலம் பிறப்புச் சான்றிதழ்: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வாட்ஸ் ஆப்பில் அறிந்துகொள்வது எப்படி? எளிய வழி!

இனி இந்த செல்போன்களில் வாட்ஸ்ஆப் இயங்காது! முழு விவரம்...
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



