திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ரஷியாவில் வாட்ஸ்-ஆப் நீக்கம்! 10 கோடி பேர் அவதி! அடுத்து என்ன?

ரஷியாவில் வாட்ஸ்-ஆப் நீக்கக்கப்பட்டதால் 10 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.

News image

வாட்ஸ்ஆப்

Updated On :12 பிப்ரவரி 2026, 3:19 pm IST

உள்நாட்டில் தயாரிக்கப்பட்டிருக்கும் செயலிகளை மக்கள் பயன்படுத்தவைக்கும் நோக்கில், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் செயலிகளை ரஷிய அரசு நீக்கியிருக்கிறது.

ரஷியாவில், இணையதளத்தில் செயலிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர அந்நாட்டு அரசு எடுத்திருக்கும் மிக முக்கிய நடவடிக்கையால் கிட்டத்தட்ட 100 கோடி பேர் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்ஆப் நிறுவனம் தன்னுடைய எக்ஸ் தளத்தில், இன்று ரஷிய அரசு, அந்நாட்டில் உள்ள அனைத்து செல்போன்களிலிலும் வாட்ஸ்ஆப்பை நீக்கியிருக்கிறது. அந்நாட்டு மக்கள் உள்நாட்டுத் தயாரிப்பு செயலிகளைப் பயன்படுத்த அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், இதனால் 10 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையால் ரஷிய மக்களின் பாதுகாப்பில் குறைபாடுக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளது.

பயனர்கள் எங்களுடன் தொடர்பில் இருக்க அனைத்து நடவடிக்கைளையும் மேற்கொள்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து டெலிகிராம் நிறுவனம் தெரிவிக்கையில் இது ஒரு நாட்டு அரசின் நடவடிக்கை, நிறுவனத்தின் கொள்கைகளுக்குள் இது வரவில்லை. எங்கள் நிறுவனத்தின் கொள்கை மக்களின் சுதந்திரம், தனியுரிமை. இதில் அழுத்தத்துக்கு இடமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு உக்ரைன் மீதான தாக்குதலின்போது, வெளிநாட்டு தொழில்நுட்ப சேவை நிறுவனங்களுக்கும், ரஷிய அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக, ரஷிய அரசு, உள்நாட்டில் தயாரிக்கப்படும் செயலிகளுக்கு முக்கியத்துவம் அளித்து, மேக்ஸ் என்ற செயலி உருவாக்கப்பட்டது. ஆனால், இது மக்களை கண்காணிக்க உருவாக்கப்பட்டதாக கடும் விமர்சனம் எழுந்துள்ளது.

பயனர்களின் சாட் தகவல்கள், தனியுரிமை பாதுகாப்புக்குரியது என்று வாட்ஸ்ஆப் கூறி வருகிறது. அந்த தகவல்களை உளவு பார்க்க, ரஷிய அரசிடம் தர வாட்ஸ்ஆப் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனவே, மக்களை கண்காணிக்க, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மேக்ஸ் செயலியை பயன்படுத்த அந்நாட்டு அரசு அறிவுறுத்தி வருகிறது.

Summary

100 million people are suffering due to the removal of WhatsApp in Russia.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.