வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள், அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பேரல்கள் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சந்தை விலையிலேயே இவை பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள்கள் புழக்கத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறி வெனிசுவேலா அதிபரை கடத்திச் செல்வதற்காக தலைநகர் கராகாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் 24 பேர் கொல்லப்பட்டதாக வெனிசுவேலா அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு போதைப்பொருள்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அந்நாட்டின் மீது ஜன. 3 ஆம் தேதி நள்ளிரவு திடீர் தாக்குதலைத் தொடர்ந்தது.
இதில் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் கைது செய்யப்பட்டு புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர். அமெரிக்க நீதித் துறை முன்பு அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
2020 ஆம் ஆண்டு முதலே அமெரிக்க நீதித் துறை போதைப் பொருள் கடத்தல் சதி, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மதுரோ மீது பதிவு செய்துள்ளது.
இந்நிலையில், வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள் அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் மேலும் பதிவிட்டுள்ளதாவது, வெனிசுவேலாவிலிருந்து பெறப்பட்டுள்ள 50 மில்லியன் பேரல் வரையிலான கச்சா எண்ணெய், கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்டு அமெரிக்காவின் துறைமுகங்களிலுள்ள கப்பல்களில் இறக்குமதி செய்யப்படும். பண மதிப்புகள் என்னால் நிர்வகிக்கப்படும். அதன் பலன்கள் அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா மக்களுக்கு பயன்படுத்தப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
US to get 30 to 50 million barrels of oil from Venezuela at market price: Trump
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாக்குதல் நடத்தவேண்டாம் என அமெரிக்காவிடம் கேட்கவில்லை: டிரம்ப் பேச்சுக்கு ஈரான் மறுப்பு!

ஹோர்முஸ் நீரிணையை கைப்பற்றி நிர்வகிப்போம்: டொனால்ட் டிரம்ப்

வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விமர்சனம்

'பிரதமர் மோடி தூங்க மாட்டார்'! காலை 6 மணிக்கு செல்போன் அழைப்பு விடுத்த டிரம்ப்!
விடியோக்கள்

உதயநிதி ஸ்டாலின் கைது! பரபரப்பான நிமிடங்கள்! | TVK | DMK




