நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய்... அமெரிக்காவுக்கு வழங்கியது வெனிசுவேலா!

வெனிசுவேலாவிடமிருந்து சந்தை விலையிலேயே 50 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் பெற்றது குறித்து...

News image

டொனால்ட் டிரம்ப் - படம் - ஏபி

Updated On :7 ஜனவரி 2026, 2:42 am

வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள், அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் பேரல்கள் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். சந்தை விலையிலேயே இவை பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள்கள் புழக்கத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறி வெனிசுவேலா அதிபரை கடத்திச் செல்வதற்காக தலைநகர் கராகாஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்புப் படை அதிகாரிகள் 24 பேர் கொல்லப்பட்டதாக வெனிசுவேலா அதிகாரப்பூர்வமாக அறிவித்ததைத் தொடர்ந்து, டிரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு போதைப்பொருள்களை கடத்தி உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக வெனிசுவேலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீது அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், அந்நாட்டின் மீது ஜன. 3 ஆம் தேதி நள்ளிரவு திடீர் தாக்குதலைத் தொடர்ந்தது.

இதில் அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸ் கைது செய்யப்பட்டு புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டனர். அமெரிக்க நீதித் துறை முன்பு அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

2020 ஆம் ஆண்டு முதலே அமெரிக்க நீதித் துறை போதைப் பொருள் கடத்தல் சதி, ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை மதுரோ மீது பதிவு செய்துள்ளது.

இந்நிலையில், வெனிசுவேலாவின் இடைக்கால அதிகாரிகள் அமெரிக்காவுக்கு உயர்தரத்திலான 30 மில்லியன் முதல் 50 மில்லியன் வரையிலான கச்சா எண்ணெயை வழங்கியுள்ளதாக டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டிரம்ப் மேலும் பதிவிட்டுள்ளதாவது, வெனிசுவேலாவிலிருந்து பெறப்பட்டுள்ள 50 மில்லியன் பேரல் வரையிலான கச்சா எண்ணெய், கப்பல்கள் மூலம் கொண்டுவரப்பட்டு அமெரிக்காவின் துறைமுகங்களிலுள்ள கப்பல்களில் இறக்குமதி செய்யப்படும். பண மதிப்புகள் என்னால் நிர்வகிக்கப்படும். அதன் பலன்கள் அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா மக்களுக்கு பயன்படுத்தப்படும் எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

US to get 30 to 50 million barrels of oil from Venezuela at market price: Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.