வங்கதேச சிறையில் இருந்துவந்த அந்நாட்டுப் பாடகர் புரோலாய் சாகி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11) காலமானார்.
உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாப்னா மாவட்ட சிறை கண்காணிப்பாளர் உமர் ஃபரூக் பேசியதாவது:
''பாடகர் புரோலாய் சாகி நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால், சிறையில் இருந்த மருத்துவர்கள் அவரை பாப்னா சர்தார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர் அங்கிருந்து வெள்ளிக்கிழமை இரவு ராஜ்ஷாகி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். எனினும் கிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் அவர் காலமானார்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்த பாடகர் புரோலாய் சாகி, பாப்னா மாவட்ட கலாசாரத் துறை செயலாளராக இருந்தவர்.
2024 ஆம் ஆண்டு ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்கு எதிரான மாணவர் போராட்டத்தின் எதிரொலியாக அந்நாட்டு ஆட்சி முடிவுக்கு வந்தது. ஷேக் ஹசீனா வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதனால், அந்நாட்டில் இருந்த அவாமி லீக் கட்சி நிர்வாகிகளை இடைகால அரசின் காவல் துறையினர் கைது செய்தனர். அந்தவகையில் பாடகர் புரோலாய் சாகியும் கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது.
சிறையில் இருந்தபோது சாகிக்கு முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என அவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் சிறை நிர்வாகம் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
Summary
Bangladeshi singer Proloy Chaki dies in custody
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழக அமைச்சர்களை சந்தித்தார் பாடகர் வேடன்!

வங்கதேசம்: தண்டனைக் காலம் முடிந்தும் 148 இந்தியா்கள் சிறையில் தவிப்பு

எஸ்.பி. பாலசுப்பிரமணியம் போல யாருமில்லை... இளையராஜா புகழாரம்!

சிறை பதிவேடுகள் முழுவதும் கணினிமயமாக்கப்படும்: அமைச்சா் ஆா். நிா்மல்குமாா்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK




