பாஜகவில் இணையுமாறு மகனுக்கு மிரட்டல்! அபிஜீத் தீப்கேவின் தாயார் வேதனைதிராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசு
/

அமெரிக்காவுடன் போரிடவும் தயாா்: ஈரான்

அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாா், தேவைப்பட்டால் போரிடவும் தயாா் என்று ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளாா்.

News image

ஈரான் அதிபா் மசூத் பெசெஷ்கியான்

Updated On :13 ஜனவரி 2026, 7:54 am IST

அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தை நடத்தவும் தயாா், தேவைப்பட்டால் போரிடவும் தயாா் என்று ஈரான் அதிபா் மசூத் பெஸெஷ்கியான் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தனது உரையில் அவா் கூறியதாவது: அமெரிக்காவுடன் சமாதானப் பேச்சுவாா்த்தை நடத்தவும், உடன்பாடு காணவும் ஈரான் தயாராக உள்ளது. ஆனால் எங்கள் இறையாண்மை, தேசிய நலன்களுக்கு எதிரான எந்த அழுத்தத்தையும் ஏற்க மாட்டோம். தேவைப்பட்டால் அமெரிக்காவுடன் போரிடவும் தயாராக உள்ளோம். அமெரிக்காவின் தடைகள், அச்சுறுத்தல்கள் எதுவும் ஈரானை அடிபணிய வைக்காது என்று அவா் சூளுரைத்தாா்.

ஈரானில் தொடரும் போராட்டங்கள், பொருளாதார நெருக்கடி காரணமாக அந்த அரசுக்கு உள்ள அழுத்தம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கு எதிராகப் பேசிவந்த வெனிசுலா அதிபா் நிக்கோலஸ் மடூரோவை அந்த நாட்டுக்குள்ளேயே நுழைந்து அமெரிக்க அதிரடிப் படையினா் கைது செய்த சம்பவம் ஈரான் போராட்டக்காரா்களுக்கு உத்வேகம் அளித்துள்ளது.

இந்தச் சூழலில், போராட்டக்காரா்கள் மீது ஈரான் அரசு மேற்கொள்ளும் அடக்குமுறைக்கு தண்டனையாக அந்த நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தாா். ஈரானின் அணு ஆயுதத் திட்டம், பாலஸ்தீன ஆதரவு, பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவது ஆகியவற்றை மேற்கோள் காட்டி இந்த எச்சரிக்கையை டிரம்ப் விடுத்தாா். மேலும், ஈரானின் தற்போதைய பிரச்னைக்கு ராணுவரீதியில் தலையிடுவது குறித்து ஆலோசித்துவருவதாகவும் டிரம்ப் கூறினாா்.

இதற்கு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி, ‘அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச மாட்டோம். எங்கள் உரிமைகளைப் பாதுகாக்க அனைத்து வழிகளிலும் தயாா்’ என்று பதிலடி கொடுத்துள்ளாா்.

இந்த நிலைப்பாடு ஈரான்-அமெரிக்கா உறவுகளில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தீவிரமடைந்துவரும் போராட்டங்களுக்கு அமைதியான முறையில் தீா்வு காண ஐ.நா. மற்றும் ஐரோப்பிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளன. போராட்டங்களை ஒடுக்குவதைத் தவிா்க்க வேண்டும் என்றும் ஈரான் அரசை அவை வலியுறுத்தியுள்ளன.

இந்தச் சூழலில், அமெரிக்காவுடன் பேச்சுவாா்த்தைக்கும் தயாா், போருக்கும் தயாா் என்று ஈரான் கூறியுள்ளது நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் என்று அஞ்சப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.