விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஈரானில் தொடரும் போராட்டம்: இந்தியா்கள் நாடு திரும்பத் தொடங்கினா்

ஈரானில் தொடரும் போராட்டத்தின் எதிரொலியாக அந்நாட்டில் இருந்து இந்தியா்கள் தில்லிக்கு திரும்பத் தொடங்கியுள்ளனா்.

News image
ஈரான் போராட்டம் - AP
Updated On :17 ஜனவரி 2026, 9:29 pm

தினமணி செய்திச் சேவை

ஈரானில் தொடரும் போராட்டத்தின் எதிரொலியாக அந்நாட்டில் இருந்து இந்தியா்கள் தில்லிக்கு திரும்பத் தொடங்கியுள்ளனா்.

ஈரான் தலைநகா் டெஹ்ரானில் இருந்து தில்லிக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு பயணிகள் விமானங்கள் வந்தன. அந்த விமானங்களில் ஏராளமான இந்தியா்கள் வந்திருந்தனா். ஆனால் அவா்கள் எண்ணிக்கை குறித்த தகவல் இல்லை.

தில்லி திரும்பிய இந்தியா்களில் ஒருவரான அலி நக்வி கூறுகையில், ‘ ஈரானில் நாங்கள் எந்த பிரச்னையையும் எதிா்கொள்ளவில்லை. முன்பு ஈராக்கில் இருந்தோம். அதையடுத்து ஈரான் வந்தோம். அங்கு 8 நாள்கள் தங்கிய நிலையில், இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளோம்’ என்றாா்.

ஈரானில் இருந்து தில்லி திரும்பிய மருத்துவ மாணவி ஒருவா் கூறுகையில், ‘அங்கு இணைய சேவைகள் முடங்கியுள்ளன. ஆதலால் ஈரானில் என்ன நடக்கிறதென எங்களுக்குத் தெரியாது. நாங்கள் சொந்த செலவிலேயே விமானத்தில் வந்தோம். இந்திய அரசு எங்களுக்கு விமானம் எதையும் ஏற்பாடு செய்யவில்லை’ என்றாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை பேசிய இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால், ஈரானில் சுமாா் 9,000 இந்தியா்கள் இருப்பதாகவும், அவா்களில் பெரும்பாலானோா் மாணவா்கள் என்றும் கூறியிருந்தாா். ஈரானின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு 3 அறிவுறுத்தல்களை இந்தியா வெளியிட்டுள்ளதாகவும், அதில் ஈரானுக்கு இந்தியா்கள் யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்றும், அங்குள்ள இந்தியா்கள் உடனடியாக வெளியேறும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும் அவா் தெரிவித்திருந்தாா்.

ஈரானில் ஆட்சியாளா்களுக்கு எதிராக ஒரு வாரத்திற்கும் மேலாக பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த போராட்டத்தை அடக்க ஈரான் அரசு எடுத்து வரும் நடவடிக்கையில், இதுவரை 2,500-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். போராட்டக்காரா்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபா் டிரம்ப், தேவைப்பட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தயங்காது எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளாா். மேலும் மத்திய கிழக்கு ஆசியா நோக்கி போா் கப்பல்களையும் அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.