நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை! டிரம்ப்

அமைதிக்கான நோபல் பரிசு வழங்காததற்கு டிரம்ப் அதிருப்தி...

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :19 ஜனவரி 2026, 2:11 pm IST

இனி அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்கப் போவதில்லை என்று நார்வே பிரதமருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் உள்பட 8 போர்களை நிறுத்தியதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இருப்பினும், 2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வெனிசூலா நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்பட்டது. இதனால் டிரம்ப் அதிருப்தி அடைந்த நிலையில், தான் பெற்ற நோபல் பரிசை டிரம்ப்புக்கு வழங்குவதாக மரியா கொரினா அறிவித்தார்.

தொடர்ந்து, வெள்ளை மாளிகையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு டிரம்ப்பிடம் தனது நோபல் பரிசை மரியா கொரினா வழங்கினார்.

இந்த நிலையில், நார்வே பிரதமர் ஜோனஸ் கார் ஸ்டோருக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடிதம் ஒன்றை எழுதியுள்ளர்.

அதில் தெரிவித்திருப்பதாவது:

“உலகளவில் 8 போர்களை நிறுத்தியும் உங்கள் நாடு (நார்வே) எனக்கு அமைதிக்கான நோபல் பரிசை வழங்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளது.

இனிமேல் அமைதியைப் பற்றி மட்டுமே சிந்திக்க வேண்டும் என்ற கடமை எனக்கு இல்லை. அது எப்போதும் எனக்கு முதன்மையாகவே இருக்கும், ஆனால், அமெரிக்காவின் நலனுக்கு எது தேவையோ அதைச் செய்வதில் கவனம் செலுத்துவேன்.

கிரீன்லாந்தை ரஷியா மற்றும் சீனாவிடமிருந்து டென்மார்க்கால் பாதுகாக்க முடியாது. அந்த நிலத்துக்கு உரிமை கொண்டாட எழுத்துப்பூர்வ ஆவணங்கள் எதுவும் டென்மார்க்கிடம் இல்லை. பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு டென்மார்க்கின் படகு அங்கு கரை சேர்ந்ததை மட்டுமே காரணமாக சொல்கிறார்கள். ஆனால், அமெரிக்க படகுகளும் அங்கு கரை சேர்ந்துள்ளது.

நேட்டோ நிறுவப்பட்டதில் இருந்து அனைவரைவிடவும் நான் அதிகமாக செய்துள்ளேன். தற்போது அமெரிக்காவுக்கு நேட்டோ எதாவது செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது. கிரீன்லாந்து மீது முழுமையான கட்டுப்பாடு எங்களுக்கு இருந்தால்தான் உலகம் பாதுகாப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

Summary

We will no longer think only about peace! - Trump

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.