கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் அமேசான்!

அமேசான் நிறுவனம் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல்...

கோப்புப் படம்

Published On :

பிரபல இணையவழி வர்த்தக நிறுவனமான அமேசான் உலகளவில் சுமார் 16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

செய்யறிவு (ஏஐ) தொழிநுட்பத்தின் வளர்ச்சியால், இணையவழி மற்றும் தகவல் தொழிநுட்ப நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைக்கும் நடவடிக்கைகளை சமீபகாலமாக அதிகரித்துள்ளன.

கடந்த 3 மாதங்களில் மட்டும் 2 ஆவது முறையாக மிகப் பெரியளவில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்யும் நடவடிக்கையில் அமேசான் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, அமேசானின் மக்கள் அனுபவம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் பெத் கலேட்டி கூறுகையில்,

“நாங்கள் அமேசான் முழுவதும் கூடுதல் அமைப்புசார் மாற்றங்களைச் செய்து வருகிறோம். இதனால், எங்கள் சக ஊழியர்கள் சிலர் பாதிப்படைவார்கள்.

இன்று நாங்கள் மேற்கொள்ளும் பணிக்குறைப்புகளால் அமேசான் முழுவதும் சுமார் 16,000 பேர் பாதிக்கப்படுவார்கள். இதனால், அவர்கள் அனைவருக்கும் ஆதரவளிக்க நாங்கள் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறோம்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, சுமார் 14,000 பதவிகளைக் குறைக்கவுள்ளதாக அமேசான் நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், இந்த மிகப் பெரியளவிலான பணி நீக்கம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Amazon is planning to lay off approximately 16,000 employees worldwide.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.