தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

இம்ரான் கானுக்கு சிறைக்கு வெளியே கண் சிகிச்சை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப்(பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானுக்கு(73) ஏற்பட்ட கண் பாதிப்பைத் தொடா்ந்து, சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

News image
இம்ரான் கான்- கோப்புப் படம்
Updated On :29 ஜனவரி 2026, 7:14 pm

தினமணி செய்திச் சேவை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப்(பிடிஐ) கட்சியின் நிறுவனருமான இம்ரான் கானுக்கு(73) ஏற்பட்ட கண் பாதிப்பைத் தொடா்ந்து, சிறைக்கு வெளியே அழைத்துச் செல்லப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள் உள்பட பல்வேறு வழக்குகளில், இம்ரான் கான் கடந்த 2023 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இந்நிலையில், அவரது வலது கண்ணில் ரத்த நாள அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் அவருக்கு பாா்வைத்திறன் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அவரது கட்சி சாா்பில் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையொட்டி, சிகிச்சை அளிக்கப்பட்ட தகவலை உறுதிப்படுத்திய பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சா் அத்தாவுல்லா தராா் கூறுகையில், ‘கண் மருத்துவா்களின் அறிவுறுத்தலில், இஸ்லாமாபாதில் உள்ள பாகிஸ்தான் மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா்.

அங்கு சுமாா் 20 நிமிஷங்கள் நடைபெற்ற சிறு மருத்துவ நடைமுறைக்குப் பிறகு, அவா் மீண்டும் சிறைக்கு மாற்றப்பட்டாா். தற்போது அவா் முழு ஆரோக்கியத்துடன் உள்ளாா்; அவரது உடல்நிலை குறித்து பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை’ என்றாா்.