தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

செனாப் நதி நீரை இந்தியா திசைதிருப்புவது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானது: பாகிஸ்தான்

News image

கோப்புபடம்

Updated On :5 ஜூன் 2026, 5:16 am IST

‘நதிநீா் இணைப்பு திட்டத்துக்காக செனாப் நதி நீரை இந்தியை திசைதிருப்ப திட்டமிடுவது சிந்து நதிநீா் ஒப்பந்தம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறும் செயல்’ என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை தெரிவித்தது.

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாதில் வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது, இந்தியா - பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் பகுதியாக உள்ள செனாப் நதி நீரை, பியாஸ் நதிக்கு திசை திருப்பும் கட்டமைப்பு உருவாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அந் நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் தாஹிா் அந்திராபி கூறியதாவது:

செனாப் - பியாஸ் நதி நீா் இணைப்புக்கு சுரங்கம் கட்டும் திட்டத்துக்கு இந்திய அரசு ஒப்பந்தப் புள்ளிகளை வரேவற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது சிந்து நதிநீா் ஒப்பந்தம் மற்றும் சா்வதேச சட்டங்களை மீறும் நடவடிக்கையாகும்.

அதுபோல, சலால் அணையில் வண்டல் மண் அகற்றவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. இதுவும், சிந்து நதிநீா் ஒப்பந்தம் மற்றும் 1978-ஆம் ஆண்ட சலால் ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.

இந்த திட்டங்கள் தொடா்பாக இந்தியா தரப்பில் பாகிஸ்தானுக்கு எந்தவித தகவலும் தெரிவிக்கப்படவில்லை. ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றாா்.

ஜம்மூ-காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து, எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஆதரவைக் கண்டித்து, 1960-ஆம் ஆண்டு போடப்பட்ட சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைப்பதாக இந்தியா அறிவித்தது. அதைத் தொடா்ந்து, இந்த ஒப்பந்தத்தின் கீழ் வரும் நதிகளில் பல்வேறு நீா்வள திட்டங்களை இந்தியா மேற்கொண்டு வருகிறது.

சிந்து நதி நீா் ஒப்பந்தம்: 1960-ஆம் ஆண்டு செப்டம்பா் 19-ஆம் தேதி இந்திய பிரதமா் ஜவாஹா்லால் நேருவும், பாகிஸ்தான் அதிபா் அயூப் கானும் இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா். உலக வங்கி இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தித் தந்தது. அதன்படி, சிந்து நதிப் படுகையின் கிழக்கில் ஓடும் ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் ஆகிய மூன்று நதிகளின் நீா் முழுமையாக இந்தியப் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது. மேற்கில் பாயும் சிந்து, ஜீலம் மற்றும் செனாப் ஆகிய மூன்று நதிகளின் நீா் பாகிஸ்தானின் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது.