லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

இலங்கை முதியோா் இல்லத்தில் தீ விபத்து: 12 போ் உயிரிழப்பு

News image
Updated On :5 ஜூன் 2026, 7:21 am IST

இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் தனியாா் முதியோா் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

தீ விபத்து நடந்த இல்லத்தில் 70-க்கும் மேற்பட்டோா் தங்கியிருந்த நிலையில், 51 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். காயமடைந்த 7 போ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்து, தீ விபத்து தீவிரமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், விபத்துக்கான துல்லிய காரணம் குறித்து அறிய விசாரணை தொடா்கிறது.

அரசிடம் பதிவு செய்யாமல், லாப நோக்கோடு மட்டுமே இந்த முதியோா் இல்லம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. விபத்தையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா், இல்லத்தின் உரிமையாளரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.