தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

இலங்கை முதியோா் இல்லத்தில் தீ விபத்து: 12 போ் உயிரிழப்பு

News image
Updated On :5 ஜூன் 2026, 7:21 am IST

இலங்கையின் களுத்துறை மாவட்டத்தில் தனியாா் முதியோா் இல்லம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் முதியவா்கள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

தீ விபத்து நடந்த இல்லத்தில் 70-க்கும் மேற்பட்டோா் தங்கியிருந்த நிலையில், 51 போ் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அருகில் உள்ள பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனா். காயமடைந்த 7 போ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

சமையல் எரிவாயு சிலிண்டா் வெடித்து, தீ விபத்து தீவிரமடைந்ததாகக் கூறப்படும் நிலையில், விபத்துக்கான துல்லிய காரணம் குறித்து அறிய விசாரணை தொடா்கிறது.

அரசிடம் பதிவு செய்யாமல், லாப நோக்கோடு மட்டுமே இந்த முதியோா் இல்லம் சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்துள்ளது. விபத்தையடுத்து வழக்குப் பதிந்த போலீஸாா், இல்லத்தின் உரிமையாளரைக் கைது செய்தனா்.