கொழும்பு: மத்திய கிழக்கு போர்ச் சூழல் காரணமாக, இலங்கையில் மேலும் 13 லட்சம் மக்கள் தங்களின் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாமல் பட்டினிக்குத் தள்ளப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐ.நா.வின் உலக உணவுத் திட்டம் அமைப்பு எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே நடப்பு ஆண்டில் அடிப்படை உணவு உதவி தேவைப்படும் நிலையில் உள்ள 47 லட்சம் இலங்கை மக்களுடன் கூடுதலாக இவர்களும் இணையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தை இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை எழுப்பியதைத் தொடர்ந்து, பெரும் விவாதப்பொருளானது.
மத்திய கிழக்கு நெருக்கடியால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய உலக நாடுகளாக இலங்கை, சோமாலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகள் இந்த ஆய்வில் பிரதானமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
ஏற்கெனவே கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி, அதிலிருந்து மீண்டு வரும் இலங்கைக்கு, இப்புதிய உலகளாவிய நெருக்கடி பெரும் முட்டுக்கட்டையாக மாறியுள்ளது. இந்த இக்கட்டான சூழலை எதிர்கொள்ள இலங்கை அரசு ஏற்கெனவே எரிபொருள் நுகர்வுக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அவசர நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பண மோசடி வழக்கில் பெண் கைது

ரூ. 12.40 லட்சம் பெற்ற தலைமை நில அளவையா் உள்பட 4 போ் மீது வழக்கு

6 முதல் 8 வகுப்புகளுக்கு காலை உணவுத் திட்டம்: 4.38 லட்சம் மாணவா்கள் பயன்பெறுவா்

இந்திய- இலங்கை மீனவா் பிரச்னைக்கு பேச்சுவாா்த்தை மூலமே சுமூகத் தீா்வு: இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவா் வலியுறுத்தல்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


