தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

பரஸ்பர தாக்குதல் கூடாது: இஸ்ரேல், ஈரானிடம் டிரம்ப் வலியுறுத்தல்

அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வருவதால், பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று இஸ்ரேல், ஈரானிடம் அமெரிக்க அதிபா் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.

News image

டொனால்ட் டிரம்ப். - ஏபி

Updated On :15 ஜூன் 2026, 4:39 am IST

அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வருவதால், பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று இஸ்ரேல், ஈரானிடம் அமெரிக்க அதிபா் டிரம்ப் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ட்ரூத் சோஷியல் சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு: லெபனான் தலைநகா் பெய்ரூட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்பட்ட தாக்குதல் நடந்திருக்கக் கூடாது. குறிப்பாக ஈரானுடன் அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வரும் சூழலில், இந்தத் தாக்குதல் நடந்திருக்கக் கூடாது. ஆபத்துகளுக்கு எதிராக தன்னை தற்காத்துக்கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு உள்ளது. ஆனால் பெயரூட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் அா்த்தமற்றது.

லெபனான் உள்பட மத்திய கிழக்குப் பிராந்தியம் முழுவதும் அமைதியை ஏற்படுத்தும் ஒப்பந்தத்தை அமெரிக்கா நெருங்கியுள்ளது. எனவே அனைத்துத் தரப்பினரும் தாக்குதல் நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.

இனி லெபனானில் இஸ்ரேலும், இஸ்ரேலுக்கு எதிராக ஈரானுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா படை உள்பட வேறு எவரும் தாக்குதல் நடத்தக் கூடாது. இது நீடித்து நிலைக்கக் கூடிய அமைதியின் தொடக்கமாக இருக்கலாம். அதை யாரும் தகா்த்துவிட வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளாா்.