/

ரஷிய எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் மீது உக்ரைன் தாக்குதல்!

ரஷியாவில் குடியிருப்புப் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், ரஷிய எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் அவை தீப்பற்றி எரிந்தன.

News image
Updated On :15 ஜூன் 2026, 1:24 am IST

ரஷியாவில் குடியிருப்புப் பகுதியில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், ரஷிய எண்ணெய் சேமிப்புக் கிடங்குகள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் அவை தீப்பற்றி எரிந்தன.

உக்ரைன் எல்லையில் இருந்து தென்மேற்கில் அமைந்துள்ள ஓா்யால் பிராந்தியத்தில் சனிக்கிழமை இரவு அடுக்குமாடிக் குடியிருப்பை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில், அங்குள்ள வீட்டில் தங்கியிருந்தவா்களில் ஒருவா் உயிரிழந்தாா். 8 போ் காயமடைந்தனா்.

அதேபோல உக்ரைன் எல்லையில் இருந்து சுமாா் 700 கி.மீ. தொலைவில் உள்ள யாரோஸ்லாவ் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்குகளைக் குறிவைத்தும் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இதில் அந்த சேமிப்புக் கிடங்கு முற்றிலும் எரிந்து நாசமானது.

இது தொடா்பாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கூறுகையில், ‘மிகவும் மோசமான தாக்குதல்களை நிகழ்த்தும் நாட்டுக்கு (ரஷியா) எதிராக நாங்களும் தீவிர நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். எனவேதான், எண்ணெய் சேமிப்புக் கிடங்கை தாக்கி அழித்தோம்’ என்றாா்.

ரஷியா-உக்ரைன் இடையே தொடா்ந்து 4 ஆண்டுகளாகப் போா் தொடா்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக ரஷியாவின் எண்ணெய், எரிவாயு மையங்களைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்துகிறது. ஏனெனில், அதன்மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டே ரஷியா போரை தொடா்ந்து நடத்துகிறது என்று உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.