ஈரானுடனான ஒப்பந்த ஆவணத்தை விரைவில் வெளியிடுவேன் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) தெரிவித்தார்.
இந்த ஆண்டுக்கான ஜி7 உச்சி மாநாடு பிரான்ஸ் நாட்டின் ஈவியன் நகரில் ஜூன் 15 முதல் 17 வரை நடைபெறுகிறது. ஜி7 உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசியதாவது:
ஈரானுடனான முழுமையான ஒப்பந்த ஆவணத்தை நான் விரைவில் வெளியிடுவேன். அதைச் செய்வதற்கு முன், முதலில் ஒரு முறையான ஏற்பாட்டை செய்துகொள்ள விரும்புகிறேன். ஆனால், அதை வெளியிடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது ஒரு சிறந்த ஆவணம்.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைக் கொண்டிருக்காது என்று அதில் கூறப்பட்டுள்ளது. நான் ஒரு செய்தியளர் சந்திப்பை நடத்தி, அந்த அறிக்கையை கேமரா முன்பு, முழுவதுமாக வாசித்துக் காட்டுவேன் என்று டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக ஈரான் - அமெரிக்கா இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானதாகவும் வரும் ஜூன் 19 ஆம் தேதி அந்த ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திடும் என்றும் அறிவிப்புகள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
ஜி7 மாநாடு என்பது உலகப் பொருளாதாரத்தில் முன்னணியில் உள்ள ஏழு நாடுகளின் தலைவர்கள், ஆண்டுதோறும் கூடி சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் ஒரு அமைப்பாகும்.
Summary
US President Donald Trump stated on Tuesday (June 16) that he would soon release the report on the agreement with Iran.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இந்திய கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதலை ஏற்க முடியாது! - டிரம்ப்பின் பதிவால் குழப்பம்!

ஈரான் மீது இன்று இரவு கடுமையான தாக்குதலை நடத்துவோம்: டிரம்ப் மிரட்டல்!







