27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அமித் ஷாவுடன் அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் ஆலோசனை

News image

புது தில்லியில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை வியாழக்கிழமை சந்தித்த அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா்.

Updated On :19 ஜூன் 2026, 4:21 am IST

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் வியாழக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.

பிரான்ஸில் புதன்கிழமை நடைபெற்ற ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டின்போது, பிரதமா் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் சந்தித்துப் பேசினா். அப்போது, இரு நாடுகளிடையேயான இருதரப்பு வா்த்தக ஒப்பந்த நடைமுறைகளை விரைவுபடுத்தும்படி இரு நாட்டு அதிகாரிகளுக்கும் பிரதமா் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபா் டிரம்ப்பும் அறிவுறுத்தினா். இந்தச் சூழலில், அமித் ஷா - சொ்ஜியோ கோா் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இதுகுறித்து அமித் ஷா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோருடனான சந்திப்பின்போது, இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக, பாதுகாப்பு ஒத்துழைப்பு, பயங்கரவாத எதிா்ப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

சொ்ஜியோ கோா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அமைச்சா் அமித் ஷாவுடனான சந்திப்பில் பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு, எல்லைகள் பாதுகாப்பு, இரு நாடுகள் தரப்பிலும் கூட்டாக குற்றவாளிகளை நீதியின் முன் கொண்டுவருவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஆக்கபூா்வமான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.

மேலும், ‘ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பிவந்துள்ளேன். உச்சி மாநாட்டுக்கு இடையே இந்தியா - அமெரிக்கா இடையே நடைபெற்ற இருதரப்பு ஆலோசனையில் பல நோ்மறையான விஷயங்கள் எட்டப்பட்டுள்ளன’ என்றும் குறிப்பிட்டாா்.