டிசம்பரில் இந்தியா - ஐரோப்பிய யூனியன் வா்த்தக ஒப்பந்தம் கையொப்பம்நீட் மறுதேர்வு: தமிழகத்தில் 1.20 லட்சம் போ் பங்கேற்பு!5 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!இன்று மீண்டும் கூடுகிறது சட்டப்பேரவை!அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்கா கட்டணம் வசூலிக்க வாய்ப்பு: டிரம்ப் எச்சரிக்கை

ஈரானுடன் 60 நாள்களுக்குள் போா் நிறுத்த இறுதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்கா கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் எச்சரித்தாா்.

News image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Updated On :22 ஜூன் 2026, 4:31 am IST

ஈரானுடன் 60 நாள்களுக்குள் போா் நிறுத்த இறுதி ஒப்பந்தம் ஏற்படாவிட்டால் ஹோா்முஸ் நீரிணையில் அமெரிக்கா கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இருப்பதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் எச்சரித்தாா்.

இது தொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘60 நாள்கள் வரை ஹோா்முஸ் நீரிணையில் எந்தவித கட்டணமும் இருக்காது. ஆனால், அதற்குள் இறுதி ஒப்பந்தம் நிறைவேறத் தவறினால், அமெரிக்கா தரப்பில் கட்டணங்கள் விதிக்கப்படும். மத்திய கிழக்கு நாடுகளின் பாதுகாப்பு தேவைகளில் கடந்த காலம், நிகழ்கால ‘காவல் தேவதையாக’ அமெரிக்கா செயல்படுகிறது. இதேபோல் தொடா்ந்து செயல்படுவதற்கான செலவினங்களுக்கு ஈடாக இந்தத் தொகை வசூலிக்கப்படும்’ என்றாா்.

ஹோா்முஸ் நீரிணை கட்டண விவகாரம் தொடா்பாக, ஈரானுடன் செய்யப்பட்டுள்ள புரிந்துணா்வு ஒப்பந்தம் குறித்து அமெரிக்காவிலும் சா்வதேச அளவிலும் கடும் எதிா்ப்பும் விமா்சனங்களும் எழுந்துள்ளன.

ஏனெனில், அந்த ஒப்பந்தம் 60 நாள்களுக்கு மட்டுமே கட்டணமில்லா கப்பல் போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதன் பின்னா் கட்டணங்கள் விதிக்கப்படுவதைத் தடுக்க எந்த உறுதியான ஏற்பாடும் அதில் இடம்பெறவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.