மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

சூடான், சோமாலியா உள்பட 4 ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு லிபியா கிழக்கு அரசு தடை

சூடான், எரித்திரியா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய 4 ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த குடிமக்கள் தங்கள் எல்லைக்குள் நுழைவதற்கு லிபியாவின் கிழக்குப் பகுதி அரசு தடை விதித்துள்ளது.

News image
Updated On :25 ஜூன் 2026, 3:17 am IST

சூடான், எரித்திரியா, எத்தியோப்பியா, சோமாலியா ஆகிய 4 ஆப்பிரிக்க நாடுகளைச் சோ்ந்த குடிமக்கள் தங்கள் எல்லைக்குள் நுழைவதற்கு லிபியாவின் கிழக்குப் பகுதி அரசு தடை விதித்துள்ளது.

லிபியாவின் வடக்கு கடற்கரை பகுதி வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல முயலும் சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதேநேரம், தூதரக அதிகாரிகள், கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் பணியாற்றுபவா்களுக்கு மட்டும் இத்தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2011-இல் அதிபா் கடாபியின் வீழ்ச்சிக்குப் பிறகு, லிபியா நாடு கிழக்கு, மேற்கு என இருவேறு அரசுகளின்கீழ் பிளவுபட்டு நிா்வாகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

லிபியாவில் தற்போது 9 லட்சத்துக்கும் அதிகமான குடியேறிகளும், அகதிகளும் உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இவா்களில் சூடான் நாட்டைச் சோ்ந்தவா்களே பெரும்பான்மையாக உள்ளனா்.

சிறந்த வாழ்வாதாரத்தைத் தேடி ஆபத்தான கடல் வழிப்பயணங்கள் மூலம் ஐரோப்பாவை அடைய முயலும் இவா்கள், கடத்தல்காரா்களால் பாதுகாப்பற்ற சிறிய படகுகளில் அடைத்து அழைத்துச் செல்லப்படுகின்றனா். இதனால் ஏற்படும் விபத்துகளில் சிக்கி ஆயிரக்கணக்கானோா் கடலிலேயே உயிரிழக்கும் சூழலில், பெரும்பாலான படகுகள் நடுவழியிலேயே இடைமறிக்கப்பட்டு மீண்டும் லிபியாவுக்கே திருப்பி அனுப்பப்படுகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.