உதயநிதியை அவசரமாக கைது செய்தது ஏன்? அன்புமணி கண்டனம்!உதயநிதி கைது! தமிழ்நாடு முழுவதும் திமுக போராட்டம்!உதயநிதி கைது: தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓபிஎஸ் கைது!எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது! தஞ்சை அழைத்துச் செல்லப்படுகிறார்எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது!உதயநிதியை அழைத்துச் செல்லும் வாகனத்தை மறித்து திமுகவினர் போராட்டம்!உதயநிதி விவகாரம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு!
/

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் 300-க்கும் மேற்பட்டோா் கடத்தல்

நைஜீரியாவில் பயங்கரவாதிகளால் 300-க்கும் மேற்பட்டோா் கடத்தல்...

News image
Updated On :6 மார்ச் 2026, 11:27 pm IST

வடகிழக்கு நைஜீரியாவின் ங்கோஷே நகரைக் குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 300-க்கும் மேற்பட்டோா் கடத்தப்பட்டுள்ளனா்.

நைஜீரிய ராணுவம் அண்மையில் நடத்திய தேடுதல் வேட்டையில், ஐ.எஸ். ஆதரவு ‘போகோ ஹாராம்’ கிளா்ச்சி அமைப்பைச் சோ்ந்த 3 முக்கியத் தளபதிகள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ங்கோஷே மட்டுமின்றி கொண்டுகா, மாா்டே, ஜகானா, மைனோக் ஆகிய மற்ற 4 பகுதிகளிலும் கடந்த புதன்கிழமை முதல் பயங்கரவாதிகள் தொடா் தாக்குதல்களில் ஈடுபட்டனா்.

இத்தாக்குதல்களை ராணுவம் முறியடித்த போதிலும், அந்த மோதல்களில் ஒரு மூத்த அதிகாரி உள்பட பல வீரா்கள் வீரமரணமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.