மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

மத்திய கிழக்கு போர்! லெபனானில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இடமாற்றம் - ஐ.நா. அறிவிப்பு!

லெபனானில் ஒரே நாளில் 1 லட்சம் மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறித்து...

News image
இஸ்ரேலின் தாக்குதலால் லெபனானில் ஒரே நாளில் 1 லட்சம் பேர் இடமாற்றம்...- AP
Updated On :10 மார்ச் 2026, 11:10 am

இணையதளச் செய்திப் பிரிவு

மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போரால், லெபனானில் ஒரே நாளில் 1 லட்சத்திற்க்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக, ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பிப். 28 முதல் போர் நடைபெற்று வருகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ராணுவத் தளங்களின் மீது ஈரானின் படைகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா கிளர்ச்சிப் படையினருக்கு எதிராக இஸ்ரேல் படைகள் தொடர் தாக்குதல்கள் நடத்தி வருவதால் அங்கு வசித்து வரும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

இதனால், லெபனானில் 24 மணிநேரங்களில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

இதுபற்றி, ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பிரதிநிதி கரோலினா லிந்தோல்ம் பில்லிங் செவ்வாய்க்கிழமை (மார்ச் 10) கூறியதாவது:

“லெபனானில் இன்று வரை 6,67,000-க்கும் அதிகமான மக்கள் அரசின் இணையத்தளத்தில் தங்களை இடமாற்றம் செய்யப்பட்டவர்களாகப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த எண்ணிக்கை ஒரே நாளில் 1,00,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

இது கடந்த 2024 ஆம் ஆண்டு உடன் ஒப்பிடுகையில் மிகவும் வேகமான இடமாற்றம்” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, ஹிஸ்புல்லா படைகளுக்கு எதிரான தாக்குதல்களை அதிகரிக்கவுள்ளதால் தெற்கு லெபனானில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை காலை இஸ்ரேல் ராணுவம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.