எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அவசரகால கையிருப்பில் வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை விடுவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
மேலும், தடையை மீறி செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைக் கடந்து விற்பனையாகி வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் ஏற்கெனவே விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் அமெரிக்காவின் அவசரகால கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை சந்தையில் விடுவிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவால் 71 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை சேமிக்க முடியும். தற்போது கையிருப்பில் 41 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சேமித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Fuel shortage! America releases 170 million barrels of crude oil!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பங்குச் சந்தை சரிவு எதிரொலி: ஒரே நாளில் ரூ. 6.31 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்!
புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை

எரிபொருள் விலை எதிரொலி: எண்ணெய் நிறுவனங்கள், பெயிண்ட் பங்குகள் சரிவு!

நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறதா? மத்திய அமைச்சா் பதில்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




