எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா அவசரகால கையிருப்பில் வைத்திருக்கும் கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை விடுவித்துள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டுசெல்லும் முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ளது.
மேலும், தடையை மீறி செல்லும் சரக்கு கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதால், சர்வதேச அளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 100 டாலரைக் கடந்து விற்பனையாகி வருவதால், பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல நாடுகளில் ஏற்கெனவே விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் அமெரிக்காவின் அவசரகால கையிருப்பில் உள்ள கச்சா எண்ணெய்யில் 17 கோடி பீப்பாய்களை சந்தையில் விடுவிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்காவால் 71 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை சேமிக்க முடியும். தற்போது கையிருப்பில் 41 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் சேமித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
Fuel shortage! America releases 170 million barrels of crude oil!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அமெரிக்கா மீது ஈரான் தாக்குதல்! கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்குமா?

மேற்காசியப் போரால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ. 74,781 கோடி இழப்பு

காத்திருக்கும் வாய்ப்பு!

ஈரான் எண்ணெய் மீதான அமெரிக்கா தடை நீக்கம்!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி




