
கச்சா எண்ணெய்
பிரதிப் படம்

கச்சா எண்ணெய்
பிரதிப் படம்
புதுதில்லி: மேற்கு ஆசிய நெருக்கடி தீவிரமடைந்ததால், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகளுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் விலை இன்று 26 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்து, ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் பீப்பாய்க்கு ஒன்றுக்கு ரூ.10,549 ஆக வர்த்தகமானது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், மார்ச் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் விலை வெள்ளிக்கிழமை வர்த்தகத்திலிருந்து ரூ.2,186 ஆக உயர்ந்து, பீப்பாய் ஒன்றுக்கு ரூ.8,363-லிருந்து ரூ.10,549 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், மார்ச் மாத விநியோகத்திற்கான கச்சா எண்ணெய் விலை ரூ.2,186 ஆக உயர்ந்து, வெள்ளிக்கிழமை வர்த்தகமான ரூ.8,363-லிருந்து ரூ.10,549 என்ற புதிய உச்சத்தை எட்டியது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதல்கள் மற்றும் அதற்குப் பதிலடியாக சவூதி அரேபியா, கத்தாா், ஓமன் உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க விமானப் படை தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் நடத்திவரும் தாக்குதல்களால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் போக்கு உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள ஹோா்முஸ் நீரிணை வழியாக நடைபெற்று வந்த கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தைகளில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் 2வது வாரத்தில் நுழைந்ததால், 2022 க்குப் பிறகு முதல் முறையாக கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 100 அமெரிக்க டாலர்களுக்கு மேல் உயர்ந்து, உலகளாவிய பணவீக்கத்தை தூண்டியது.
ஏப்ரல் மாதத்திற்கான டெலிவரிக்கான மேற்கு டெக்சாஸ் இடைநிலை கச்சா எண்ணெய் ஃபியூச்சர்ஸில், பீப்பாய் ஒன்றுக்கு 28.58 அமெரிக்க டாலர்கள் உயர்ந்து 119.48 அமெரிக்க டாலர்களாகவும், மே மாத ஒப்பந்தத்திற்கான பிரெண்ட் கச்சா எண்ணெய் நியூயார்க்கில் 26.71 அமெரிக்க டாலர்கள் உயர்ந்து பீப்பாய் ஒன்றுக்கு 119.40 அமெரிக்க டாலர்களாகவும் உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...