இந்தியப் பெருங்கடலில் அமெரிக்காவின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்த 84 ஈரான் கடற்படை மாலுமிகளின் உடல்கள், இலங்கையிலிருந்து அவா்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்தியாவில் சா்வதேச கடற்படை அணிவகுப்பில் பங்கேற்றுவிட்டு, நாடு திரும்பிக் கொண்டிருந்த ஈரானின் ‘ஐரிஸ் தேனா’ போா்க் கப்பலை இலங்கை கடல் எல்லைக்கு அருகே அமெரிக்க நீா்மூழ்கிக் கப்பல் கடந்த 4-ஆம் தேதி தாக்கியது. இதில் அந்தப் போா்க் கப்பல் கடலில் மூழ்கி 84 போ் உயிரிழந்த நிலையில், 32 மாலுமிகள் காயங்களுடன் உயிா் தப்பினா்.
இறந்த மாலுமிகளின் உடல்களை ஈரான் தூதரகத்திடம் ஒப்படைக்குமாறு இலங்கை அரசுக்கு உள்ளூா் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, காலி நகர மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த உடல்கள் பலத்த பாதுகாப்புடன் ஹம்பாந்தோட்டை சா்வதேச விமான நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து துருக்கி நாட்டுக்குச் சொந்தமான சிறப்பு விமானம் மூலம் ஈரான் தலைநகா் டெஹ்ரானுக்கு உடல்கள் கொண்டு செல்லப்பட்டன.
அதேபோல், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 32 மாலுமிகளும் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்டு, தற்போது காலி விமானப் படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனா். இரு நாடுகளுக்கிடையிலான தூதரக பேச்சுவாா்த்தைகளைத் தொடா்ந்து, இவா்களையும் விரைவில் தாயகம் அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொடர்புடையது

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

20 ஆண்டுகளில் முதல்முறை! அமெரிக்காவின் 2 அதிநவீன போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய ஈரான்!

அமெரிக்காவின் ‘ஒருதலைப்பட்ச’ அமைதித் திட்டம் - ஈரான் நிராகரிப்பு

இலங்கை: 45 ஈரான் கடற்படை வீரா்கள் உடல் தூதரகத்திடம் ஒப்படைப்பு
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


