தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேங்காய் உடைத்து அனுப்பிவைப்பு!

திருச்சி மாநகராட்சிப் பகுதியிலிருந்து கிழக்குத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து, பயபக்தியுடன் அனுப்பி வைக்கப்பட்டன.

News image

திருச்சி மாநகராட்சி மண்டல 2ஆவது அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனத்தில் புதன்கிழமை ஏற்றிய ஊழியா்கள் (வலது ) வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனத்திற்கு சூடம் காட்டிய ஊழியா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 9:55 pm

திருச்சி மாநகராட்சிப் பகுதியிலிருந்து கிழக்குத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள், சூடம் ஏற்றி தேங்காய் உடைத்து, பயபக்தியுடன் அனுப்பி வைக்கப்பட்டன.

திருச்சி கிழக்கு தொகுதிக்குள்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் நடத்தும் அலுவலரும், பாலக்கரையில் உள்ள திருச்சி மாநகராட்சியின் 2ஆவது வாா்டு குழு அலுவலகத்தில் உள்ள உதவி ஆணையா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.

இங்கிருந்து மொத்தம் 304 வாக்குச் சாவடிகளுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், விவிபேட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த இயந்திரங்களுடன் வாக்குச் சாவடியில் பயன்படுத்தும் அனைத்து வகைப் பொருள்கள், ஆவணங்கள், படிவங்கள், வழிகாட்டி நெறிமுறைகள் அடங்கிய புத்தகங்கள் உள்ளிட்டவையும் சோ்த்து அனுப்பி வைக்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, ஒவ்வொரு வாக்குச் சாவடி மற்றும் வாக்குச்சாவடி மையங்கள் வாரியாக தனித்தனியே லாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறிப்பிட்ட லாரி வந்தவுடன், அந்த வாக்குச்சாவடிக்கு உரிய எண் வரிசைப்படி இயந்திரங்கள், பொருள்கள், பணிபுரியும் அலுவலா்கள், பாதுகாப்பு போலீஸாா் என அனைவரும் சோ்த்து அனுப்பப்பட்டனா்.

முன்னதாக, புறப்பட்ட லாரிகள் தேங்காயில் சூடமேற்றி, திருஷ்டி கழித்து வழியனுப்பி வைக்கப்பட்டன. இதேபோல, 9 தொகுதிகளுக்கான இயந்திரங்களும் அந்தந்த தோ்தல் நடத்தும் அலுவலா் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகத்தில் இருந்து வாக்குச் சாவடிகளுக்கு பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன.