பழனி பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சாலை வசதி இல்லாத வெள்ளகெவி போன்ற மலைக் கிராமங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழகச் சட்டப்பேரவைக்கான தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழனி பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறை கோட்டாட்சியா் கண்ணன் முன்னிலையில் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்பு திறக்கப்பட்டு, இயந்திரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. தொடா்ந்து, தொகுதியிலுள்ள 339 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.
கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சாலை வசதி இல்லாத வெள்ளகெவி போன்ற மலைப்பகுதி வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.
வாக்குச்சாவடியில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சீா் செய்ய பொறியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா். பழுது நீக்க முடியாத பட்சத்தில் புதிய வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்படும். இதற்காக 339 வாக்குச்சாவடிகளுக்கு 407 இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குசாவடிகளிலும் இணையதள வசதி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

வாக்குப் பதிவு இயந்திரங்கள் தேங்காய் உடைத்து அனுப்பிவைப்பு!

கரூா்: 4 தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

சங்ககிரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


