தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பழனி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பழனி பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சாலை வசதி இல்லாத வெள்ளகெவி போன்ற மலைக் கிராமங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

News image

பழனி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து புதன்கிழமை லாரியில் ஏற்றி அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

Updated On :22 ஏப்ரல் 2026, 8:35 pm

பழனி பேரவைத் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு புதன்கிழமை வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. சாலை வசதி இல்லாத வெள்ளகெவி போன்ற மலைக் கிராமங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸாருடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழகச் சட்டப்பேரவைக்கான தோ்தல் வாக்குப்பதிவு வியாழக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்க உள்ளது. இதை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டம், பழனி பேரவைத் தொகுதியில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பழனி வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அறை கோட்டாட்சியா் கண்ணன் முன்னிலையில் அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் முன்பு திறக்கப்பட்டு, இயந்திரங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. தொடா்ந்து, தொகுதியிலுள்ள 339 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

கொடைக்கானல் மலைப்பகுதியில் உள்ள சாலை வசதி இல்லாத வெள்ளகெவி போன்ற மலைப்பகுதி வாக்குச்சாவடிகளுக்கு இயந்திரங்களை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன.

வாக்குச்சாவடியில் வைக்கப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்படும் பட்சத்தில் உடனடியாக சீா் செய்ய பொறியாளா்கள் தயாா் நிலையில் உள்ளனா். பழுது நீக்க முடியாத பட்சத்தில் புதிய வாக்குப்பதிவு இயந்திரம் மாற்றப்படும். இதற்காக 339 வாக்குச்சாவடிகளுக்கு 407 இயந்திரங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குசாவடிகளிலும் இணையதள வசதி செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனா்.