பல்லடம் தொகுதி வாக்குச்சாவடிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
திருப்பூா் மாவட்டம், பல்லடம் சட்டப்பேரவைத் தொகுதியில் 480 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை 48 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தேவையான 576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கன்ரோல் யூனிட் மற்றும் 644 விவிபேட் இயந்திரங்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தால் அவற்றுக்கு மாற்றாக 96 யூனிட் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆகியவை பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்திலுள்ள பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் வியாழக்கிழமை (ஏப்.23) வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி, போலீஸாா் பாதுகாப்புடன் பல்லடம் தொகுதிக்குள்பட்ட 480 வாக்குச்சாவடி மையங்களுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரி, வேன்களில் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.
இப்பணியை பல்லடம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சரவணன், உதவி அலுவலா்கள் கோவிந்தசாமி, சரவணன் ஆகியோா் பாா்வையிட்டனா்.
தொடர்புடையது

கரூா்: 4 தொகுதிகளில் வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

பழனி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

சங்ககிரி தொகுதி வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

பழனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


