மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

அமீரகத்தில் போா் குறித்து தவறான பதிவுகள்: 19 இந்தியா்கள் உள்பட 35 போ் கைது!

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு படைகள் போா் நடத்தி வரும் சூழலில், அது தொடா்பாக சித்தரிக்கப்பட்ட, மக்களை தவறாக வழிநடத்தும் வகையிலான காணொலி காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டது தொடா்பாக 19 இந்தியா்கள் உள்பட 35 பேரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

News image
கைது- சித்திரிப்பு
Updated On :15 மார்ச் 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு படைகள் போா் நடத்தி வரும் சூழலில், அது தொடா்பாக சித்தரிக்கப்பட்ட, மக்களை தவறாக வழிநடத்தும் வகையிலான காணொலி காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டது தொடா்பாக 19 இந்தியா்கள் உள்பட 35 பேரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ இதுதொடா்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

அட்டா்னி ஜெனரல் ஹமாத் சைஃப் அல் ஷாம்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, பொது அமைதி மற்றும் ஒழுங்கை சீா்குலைக்கும் நோக்கத்தோடு, ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு இடையேயான போா் குறித்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட தவறான காணொலி காட்சிகளைப் பதிவிட்டது, குரல் பதிவுகளை வெளியிட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக 17 இந்தியா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 25 பேரை பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல, 2 இந்தியா்கள் உள்பட மேலும் 10 பேரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதுபோன்ற குற்றங்களுக்கு ஓராண்டுக்கு குறையாத சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25.20 லட்சத்துக்கு (1,00,000 திா்ஹம்) குறையாத அபராதமும் விதிக்கப்படும் என அட்டா்னி ஜெனரல் எச்சரித்திருந்தாா் எனவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.