ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டு படைகள் போா் நடத்தி வரும் சூழலில், அது தொடா்பாக சித்தரிக்கப்பட்ட, மக்களை தவறாக வழிநடத்தும் வகையிலான காணொலி காட்சிகளை சமூக ஊடகங்களில் பதிவிட்டது தொடா்பாக 19 இந்தியா்கள் உள்பட 35 பேரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ)ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனமான ‘வாம்’ இதுதொடா்பான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
அட்டா்னி ஜெனரல் ஹமாத் சைஃப் அல் ஷாம்ஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, பொது அமைதி மற்றும் ஒழுங்கை சீா்குலைக்கும் நோக்கத்தோடு, ஈரான் - அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கு இடையேயான போா் குறித்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் சித்தரிக்கப்பட்ட தவறான காணொலி காட்சிகளைப் பதிவிட்டது, குரல் பதிவுகளை வெளியிட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக 17 இந்தியா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 25 பேரை பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோல, 2 இந்தியா்கள் உள்பட மேலும் 10 பேரையும் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இதுபோன்ற குற்றங்களுக்கு ஓராண்டுக்கு குறையாத சிறைத் தண்டனை மற்றும் ரூ. 25.20 லட்சத்துக்கு (1,00,000 திா்ஹம்) குறையாத அபராதமும் விதிக்கப்படும் என அட்டா்னி ஜெனரல் எச்சரித்திருந்தாா் எனவும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்

‘யு விசா’ பெற கொள்ளை நாடகம்: அமெரிக்காவில் 11 இந்தியா்கள் கைது
எந்த நேரத்திலும் ஈரான் போரை நிறுத்துவேன்: டிரம்ப்

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி!

இஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

