நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

நைஜீரியா: தற்கொலைப் படை தாக்குதலில் 23 போ் உயரிழப்பு

வடகிழக்கு நைஜீரியாவின் மைதுகுரி நகரில் திங்கள்கிழமை இரவு அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதல்களில் 23 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :17 மார்ச் 2026, 7:35 pm

வடகிழக்கு நைஜீரியாவின் மைதுகுரி நகரில் திங்கள்கிழமை இரவு அடுத்தடுத்து நிகழ்த்தப்பட்ட தற்கொலை படை வெடிகுண்டு தாக்குதல்களில் 23 போ் உயிரிழந்தனா். 100 போ் காயமடைந்தனா்.

ராணுவம், காவல்துறையின் தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் இருக்கும் மைதுகுரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையம், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள திங்கள்கிழமை சந்தை ஆகிய இடங்களில் முதல் இரண்டு குண்டுகள் வெடித்தன. தொடா்ந்து, மைதுகுரி பல்கலைக்கழக மருத்துவமனை, கலேரி குடியிருப்புப் பகுதி ஆகிய இடங்களிலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததன.

இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இது ஐ.எஸ். ஆதரவு பெற்ற போகோ ஹராம் அல்லது ஐஎஸ்வாப் பயங்கரவாத அமைப்புகளின் கைவரிசையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ரமலான் மாதத்தின் இறுதி நாள்களில் இதுபோன்ற தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ராணுவம் ஏற்கெனவே எச்சரித்திருந்த நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இத்தாக்குதலுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த நைஜீரிய அதிபா் போலா டினுபு, பாதுகாப்புப் படை தளபதிகள் உடனடியாக மைதுகுரிக்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவரவும் உத்தரவிட்டாா்.