தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்

News image
டிரம்ப்- AP
Updated On :18 மார்ச் 2026, 10:42 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்கா செல்லும் சில வெளிநாட்டுப் பயணிகள் 15,000 டாலா் (சுமாா் ரூ.14 லட்சம்) வரை பிணைத்தொகை செலுத்தும் நடைமுறையை மோரீஷஸ் உள்பட மேலும் 12 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

விசாக் காலத்தை முடித்த பின்னரும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்பட்டியலில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நமது அண்டை நாடுகளும் இப்பட்டியலில் உள்ளன.

அதேபோல், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினா், தாமாக முன்வந்து வெளியேறினால் 2,600 டாலா் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.