பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்

News image

டிரம்ப்

AP

Updated On :18 மார்ச் 2026, 10:42 pm

தினமணி செய்திச் சேவை

அமெரிக்கா செல்லும் சில வெளிநாட்டுப் பயணிகள் 15,000 டாலா் (சுமாா் ரூ.14 லட்சம்) வரை பிணைத்தொகை செலுத்தும் நடைமுறையை மோரீஷஸ் உள்பட மேலும் 12 நாடுகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

விசாக் காலத்தை முடித்த பின்னரும் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்குவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போது இப்பட்டியலில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது. வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நமது அண்டை நாடுகளும் இப்பட்டியலில் உள்ளன.

அதேபோல், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள வெளிநாட்டினா், தாமாக முன்வந்து வெளியேறினால் 2,600 டாலா் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.