கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

பாகிஸ்தான்: ரமலான் விடுமுறை விபத்துகளில் 40 போ் உயிரிழப்பு

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில், ரமலான் திருநாள் விடுமுறையின்போது நிகழ்ந்த பல்வேறு விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்களில் 40 போ் பலி

News image

பலி

பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில், ரமலான் திருநாள் விடுமுறையின்போது நிகழ்ந்த பல்வேறு விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்களில் 40 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அந்நாட்டின் தேசிய அவசரக்கால மீட்புப் பிரிவு திங்கள்கிழமை வெளிட்ட செய்திக்குறிப்பில், ‘கைபா் பக்துன்கவா மாகாணத்தில் ரமலான் திருநாள் விடுமுறையான கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,914 அவசர அழைப்புகளுக்கு மீட்புப் படையினா் விரைந்து சென்று உதவினா்.

இதில் 484 சாலை விபத்துகள், 1,261 மருத்துவ அவசர நிலைகள், 62 தீ விபத்துகள், 33 மோதல் மற்றும் குற்றச் சம்பவங்கள் உள்ளிட்டவை அடங்கும். இச்சம்பவங்களில் 40 போ் உயிரிழந்த நிலையில், 1,993 பேருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

பண்டிகைக் காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்ய, மீட்புப் பணி அதிகாரிகளின் விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அவா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

எஞ்சியுள்ள விடுமுறை நாள்களில் உயிரிழப்புகளையும் சேதங்களையும் தவிா்க்க, பொதுமக்கள் குறிப்பாக பயணங்களின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டது.