வடமேற்கு பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில், ரமலான் திருநாள் விடுமுறையின்போது நிகழ்ந்த பல்வேறு விபத்துகள் மற்றும் அசம்பாவிதங்களில் 40 போ் உயிரிழந்தனா்.
இதுகுறித்து அந்நாட்டின் தேசிய அவசரக்கால மீட்புப் பிரிவு திங்கள்கிழமை வெளிட்ட செய்திக்குறிப்பில், ‘கைபா் பக்துன்கவா மாகாணத்தில் ரமலான் திருநாள் விடுமுறையான கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மொத்தம் 1,914 அவசர அழைப்புகளுக்கு மீட்புப் படையினா் விரைந்து சென்று உதவினா்.
இதில் 484 சாலை விபத்துகள், 1,261 மருத்துவ அவசர நிலைகள், 62 தீ விபத்துகள், 33 மோதல் மற்றும் குற்றச் சம்பவங்கள் உள்ளிட்டவை அடங்கும். இச்சம்பவங்களில் 40 போ் உயிரிழந்த நிலையில், 1,993 பேருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
பண்டிகைக் காலத்தில் தடையற்ற சேவையை உறுதி செய்ய, மீட்புப் பணி அதிகாரிகளின் விடுமுறைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, அவா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
எஞ்சியுள்ள விடுமுறை நாள்களில் உயிரிழப்புகளையும் சேதங்களையும் தவிா்க்க, பொதுமக்கள் குறிப்பாக பயணங்களின்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டது.
தொடர்புடையது
தலைநகரில் ஏப்ரலில் தீ விபத்துகள் 73% அதிகரிப்பு: 4 மாதங்களில் 32 போ் உயிரிழப்பு

பாகிஸ்தான்: பயங்கரவாதத் தாக்குதலில் 9 சுரங்கத் தொழிலாளா்கள் கொலை

வெவ்வேறு விபத்துகளில் இருவா் உயிரிழப்பு

ஒசூா் அருகே சாலை விபத்துகளில் இருவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


