/

பாகிஸ்தான்: 13 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் ஊடுருவ முயன்ற 13 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

News image

ஏபி

Updated On :2 மே 2026, 3:36 am IST

ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய பாகிஸ்தானின் கைபா் பக்துன்கவா மாகாணத்தில் ஊடுருவ முயன்ற 13 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினா் சுட்டுக் கொன்றனா்.

தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பைச் சோ்ந்த இவா்கள், முகமந்த் மற்றும் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டங்களில் எல்லை தாண்டி ஊடுருவ முயன்றபோது ராணுவத்தினரால் தடுத்து நிறுத்தப்பட்டு, முறியடிக்கப்பட்டனா்.

இதனிடையே, பன்னு மாவட்டத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரின் கவச வாகனத்தின் மீது அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினா்.

இத்தாக்குதலில் காவலா் ராஸ் அலி ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அருகில் இருந்த பொதுமக்களில் ஒருவரும் காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.