ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவன முன்னாள் சிஇஓ கபில சந்திரசேனை கொழும்பில் உள்ள அவரின் வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.
ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் சிஇஓ-ஆக 2011 முதல் 2015 வரையிலான பதவிக்காலத்தில், ஏா்பஸ் நிறுவனத்திடம் இருந்து விமானங்கள் வாங்கியதில் லஞ்சப்பணம் கைமாறியதாகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் கபில சந்திரசேனை கடந்த மாா்ச்சில் 2-ஆவது முறையாக கைதானாா்.
இந்த வாரத் தொடக்கத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட இவரை, ஊழல் தடுப்பு ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் மீண்டும் கைது செய்ய நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது. இச்சூழலில், இவரின் சந்தேக மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதே ஊழல் வழக்கில், முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்ச வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ராஜபட்ச லஞ்சம் பெற்றதைக் கபில சந்திரசேனை ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த வாக்குமூலம் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பெறப்பட்டதாக அவரின் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனா்.
தொடர்புடையது
ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸுக்கு விமானங்கள் வாங்கியதில் ஊழல்: ராஜபட்சவுக்கு சம்மன்

டிவிட்டா் முன்னாள் சிஇஓ தொடங்கிய ஏ.ஐ. நிறுவன மதிப்பு 200 கோடி டாலா்!

ஊழல் வழக்கு: ஹரியாணா முன்னாள் அமைச்சா் உள்பட 5 போ் மீது வழக்கு பதிவு
ஆப்பிள் சிஇஓ டிம் குக் விடைபெறுகிறாா்!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

