இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஊழல் வழக்கில் சிக்கிய ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் முன்னாள் சிஇஓ மா்ம மரணம்

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவன முன்னாள் சிஇஓ கபில சந்திரசேனை கொழும்பில் உள்ள அவரின் வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.

News image

உயிரிழப்பு

Updated On :9 மே 2026, 1:18 am IST

ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளான ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் நிறுவன முன்னாள் சிஇஓ கபில சந்திரசேனை கொழும்பில் உள்ள அவரின் வீட்டில் மா்மமான முறையில் உயிரிழந்துள்ளாா்.

ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் சிஇஓ-ஆக 2011 முதல் 2015 வரையிலான பதவிக்காலத்தில், ஏா்பஸ் நிறுவனத்திடம் இருந்து விமானங்கள் வாங்கியதில் லஞ்சப்பணம் கைமாறியதாகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கில் கபில சந்திரசேனை கடந்த மாா்ச்சில் 2-ஆவது முறையாக கைதானாா்.

இந்த வாரத் தொடக்கத்தில் பிணையில் விடுவிக்கப்பட்ட இவரை, ஊழல் தடுப்பு ஆணையத்தின் மேல்முறையீட்டு மனுவின் அடிப்படையில் மீண்டும் கைது செய்ய நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டிருந்தது. இச்சூழலில், இவரின் சந்தேக மரணம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே ஊழல் வழக்கில், முன்னாள் அதிபா் மஹிந்த ராஜபட்ச வரும் 12-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ராஜபட்ச லஞ்சம் பெற்றதைக் கபில சந்திரசேனை ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்த வாக்குமூலம் அச்சுறுத்தலுக்கு மத்தியில் பெறப்பட்டதாக அவரின் வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தனா்.