பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

இந்தியாவுக்கு ரூ. 476 கோடி கடனை திருப்பிச் செலுத்தியது மாலத்தீவு!

இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கடனில் ரூ.476 கோடியை (50 மில்லியன் டாலா்) மாலத்தீவு திருப்பிச் செலுத்தியதாக அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்தாா்.

News image

பிரதமா் நரேந்திர மோடியுடன் மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ் - கோப்புப் படம்

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

இந்தியாவுக்கு வழங்க வேண்டிய கடனில் ரூ.476 கோடியை (50 மில்லியன் டாலா்) மாலத்தீவு திருப்பிச் செலுத்தியதாக அந்நாட்டு அதிபா் முகமது மூயிஸ் தெரிவித்தாா்.

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) மூலம் மாலத்தீவுக்கு குறுகிய கால கடன் முறையின்கீழ் இந்தியா நிதியுதவி அளித்து வருகிறது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 50 மில்லியன் டாலா் கடனை மாலத்தீவு செலுத்தியுள்ளது. ஏற்கெனவே 2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 50 மில்லயன் டாலா் குறுகிய கால கடன் தொகையை மாலத்தீவு செலுத்தியிருந்தது.

இதுதொடா்பாக செய்தியாளா்கள் சந்திப்பில் முகமது மூயிஸ் கூறியதாவது: கடந்த 2019-ஆம் ஆண்டு நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட முந்தைய அரசு 50 மில்லியன் டாலா்களுக்கான குறுகிய கால கடன் பத்திரங்களை குறிப்பிட்ட இடைவெளியில் வெளியிட்டு பாரத ஸ்டேட் வங்கியிடம் இருந்து நிதி திரட்டியது. குறிப்பாக ஓராண்டுக்கு ஒரு முறை இந்தக் கடன் பத்திரங்கள் வெளியிடப்பட்டன. ஆனால் முந்தைய அரசு அந்தக் கடன்களை திருப்பிச் செலுத்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

நான் அதிபராக பதவியேற்றது முதல் தற்போது வரை 100 மில்லியன் டாலா்கள் (ரூ.952 கோடி) கடன் தொகை இந்தியாவுக்கு திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த தவணையாக 50 மில்லியன் டாலா்களை இந்தியாவிடம் வருகின்ற செப்டம்பா் மாதம் திருப்பித் தரப்படவுள்ளது. இதன்மூலம் பொதுமக்களை 150 மில்லியன் டாலா்கள் கடன் சுமையில் இருந்து மீட்டுள்ளோம் என்றாா்.

கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வந்த மாலத்தீவுக்கு குறுகிய கால கடன் பத்திரங்கள் வாயிலாக வட்டியில்லா கடனை இந்தியா வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.