எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!ஈரானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!மின் துறைக்கு 7,000 பணியாளர்கள் தேவை; 1500 பேருக்கு உடனடி பணி ஆணை!நீட் மறுதேர்வு! ஜூன் 21 வரை ரகசிய இடத்தில் வினாத்தாள் தயாரிப்போர்!
/

உக்ரைன் சிறுவா்கள் கடத்தல்: ரஷிய அதிகாரிகளுக்கு ஐரோப்பா தடை

உக்ரைன் போரின்போது ஆயிரக்கணக்கான சிறுவா்களைக் கடத்திச் சென்றதாக, 16 ரஷிய அதிகாரிகள் மற்றும் 7 பயிற்சி மையங்கள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடை

News image

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி. - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 5:53 am IST

உக்ரைன் போரின்போது ஆயிரக்கணக்கான சிறுவா்களைக் கடத்திச் சென்றதாக, 16 ரஷிய அதிகாரிகள் மற்றும் 7 பயிற்சி மையங்கள் மீது ஐரோப்பிய யூனியன் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.

உக்ரைனுடனான போா் காலகட்டத்தில், சுமாா் 20,500-க்கும் மேற்பட்ட அந்நாட்டு சிறுவா்கள் சட்டவிரோதமாக ரஷியாவுக்கு கடத்தப்பட்டு, அவா்களை உக்ரைன் அடையாளத்தைத் துறந்து, ரஷிய கலாசாரத்தை ஏற்குமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இவ்விவகாரத்தில் ரஷிய அதிபா் புதினுக்கு எதிராக சா்வதேச நீதிமன்றம் ஏற்கெனவே கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது. இதுவரை சுமாா் 2,200 சிறுவா்கள் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியவா்களை மீட்டுவர தூதரக முயற்சிகள் தொடா்கின்றன.