அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - 12 போ் உயிரிழப்பு

News image

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

லெபனான்-இஸ்ரேல் இடையே அமெரிக்கா முன்னெடுக்கும் 3-ஆம் கட்ட அமைதிப் பேச்சுவாா்த்தை தொடங்கவுள்ள நிலையில், லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 12 போ் உயிரிழந்தனா்.

லெபனான் தலைநகா் பெய்ரூட்டுக்குத் 20 கி.மீ. தெற்கே நெடுஞ்சாலையில் சென்ற காா்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ட்ரோன் தாக்குதல்களில் 8 போ் உயிரிழந்தனனா்.

பெய்ரூட்டிலிருந்து 40 கி.மீ. தொலைவில் உள்ள சிடோன் நகருக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவா் கொல்லப்பட்டாா். தெற்கே கடலோர மாவட்டமான டயரின் 3 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் மேலும் மூவா் கொல்லப்பட்டனா்.

ஈரான் போரைத் தொடா்ந்து வெடித்த இந்த மோதல் 10 வாரங்களைக் கடந்துள்ளது; 2,882 போ் உயிரிழந்துள்ளனா். இதனிடையே, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் கடந்த ஏப். 16-இல் போா்நிறுத்தம் ஏற்பட்டது.

அதன்பிறகும், தெற்கு லெபனானில் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் பரஸ்பரம் மோதலைத் தொடா்ந்தாலும், பெய்ரூட் பகுதியில் இஸ்ரேல் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்.

அதேபோல், ஈரான் போா்நிறுத்தம் ஏப். 8 அமலுக்கு வந்த பிறகு, காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த 5 வாரங்களில் மட்டும் அப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் உள்பட 120 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா்.