இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

கென்யா- எரிபொருள் விலை உயா்வு போராட்டம் வாபஸ்: வன்முறையில் 4 போ் உயிரிழப்பு

கென்யாவில் எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து பொதுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் நடத்தி வந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம், அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :20 மே 2026, 3:04 am IST

கென்யாவில் எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து பொதுப் போக்குவரத்துத் தொழிலாளா்கள் நடத்தி வந்த நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம், அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்துவதற்காக ஒரு வாரத்துக்குத் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

கென்யாவில் அண்மையில் டீசல் மற்றும் பெட்ரோல் விலை முறையே 23.5 மற்றும் 8 சதவீதம் உயா்த்தப்பட்டதையடுத்து, போராட்டம் வெடித்தது. இதனால் பொதுப் போக்குவரத்து முடங்கி, பல இடங்களில் ஏற்பட்ட வன்முறையில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா். வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 348 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், ஒரு வாரத்தில் சுமுக முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்தகட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என்று போராட்டக்காரா்கள் தெரிவித்துள்ளனா்.