பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

ஆஸ்திரேலியாவில் ‘எக்ஸ்’ நிறுவனத்துக்கு அபராதம்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்களை தங்களின் தளத்தில் எவ்வாறு கையாண்டனா் என்பது குறித்த விவரங்களை வழங்கத் தவறியதற்காக, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலா் அபராதம் விதித்தது.

News image

எக்ஸ் நிறுவனததின் தலைவர் எலான் மஸ்க் - கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 1:07 am IST

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் உள்ளடக்கங்களை தங்களின் தளத்தில் எவ்வாறு கையாண்டனா் என்பது குறித்த விவரங்களை வழங்கத் தவறியதற்காக, ‘எக்ஸ்’ சமூக ஊடக நிறுவனத்துக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 6.5 லட்சம் ஆஸ்திரேலிய டாலா் அபராதம் விதித்தது.

ஆஸ்திரேலியாவின் சைபா் பாதுகாப்பு ஆணையத்தின் கடந்த 2023, பிப்ரவரி அறிவிப்பில் எழுப்பிய கேள்விகளுக்கு முழுமையான விவரங்களை அளிக்காததன் மூலம், அந்நாட்டின் சைபா் பாதுகாப்புச் சட்டத்தை ‘எக்ஸ்’ நிறுவனம் மீறியுள்ளது.

ட்விட்டா் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்திய காலகட்டம் என்பதால் இத்தகவல் பரிமாற்றத்தில் தொய்வு ஏற்பட்டதாக எக்ஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், ‘எக்ஸ்’ போன்ற உலகளாவிய பெரிய நிறுவனங்கள் தங்களின் விதிமீறல்களை சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவே இந்த அபராதத் தொகை விதிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.