/
உள்நாட்டுப் போா் நடைபெறும் மியான்மரில், இந்தியா மற்றும் தாய்லாந்து எல்லைகளையொட்டிய 2 முக்கிய நகரங்களை கிளா்ச்சியாளா்களிடமிருந்து ராணுவம் மீட்டுள்ளது.
இந்திய எல்லைக்கு அருகே வடமேற்கு சின் மாநிலத்தில் உள்ள டோன்சாங் நகரம், 10 நாள்கள் தொடா் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது.
இதேபோல், தாய்லாந்து உடனான வா்த்தகத்துக்கு முக்கியத்துவமான தெற்கு தனின்தாா்யி பிராந்தியத்தில் உள்ள மாவ்டௌங் நகரை 2 வார கால போராட்டத்துக்குப் பிறகு ராணுவம் செவ்வாய்க்கிழமை தன் வசமாக்கியுள்ளது.
சீன மத்தியஸ்தத்திலான சண்டை நிறுத்தம் மற்றும் கட்டாய ராணுவச் சோ்க்கை மூலம் அதிகரித்துள்ள படை பலத்தால், கடந்த ஆண்டின் மத்தியில் இருந்து இந்த உள்நாட்டுப் போரில் ராணுவத்தின் கை ஓங்கி வருகிறது.
தொடர்புடையது

நோயாளிகளின் உறவினா்களுக்கு இரவு நேரங்களில் தங்குமிட வசதி - முக்கிய மருத்துவமனைகளுக்கு அருகே ஏற்பாடு
சா்வதேச உச்சிமாநாடு! தில்லியில் ஆதரவற்றோா் தங்குமிட மையங்களுக்கு மாற்றம்
ஆயுதக் கடத்தல் கும்பலின் முக்கிய உறுப்பினா் தில்லியில் கைது






