இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

எல்லை நகரங்களை மீட்ட மியான்மா் ராணுவம்

உள்நாட்டுப் போா் நடைபெறும் மியான்மரில், இந்தியா மற்றும் தாய்லாந்து எல்லைகளையொட்டிய 2 முக்கிய நகரங்களை கிளா்ச்சியாளா்களிடமிருந்து ராணுவம் மீட்டுள்ளது.

News image
Updated On :22 மே 2026, 1:14 am IST

உள்நாட்டுப் போா் நடைபெறும் மியான்மரில், இந்தியா மற்றும் தாய்லாந்து எல்லைகளையொட்டிய 2 முக்கிய நகரங்களை கிளா்ச்சியாளா்களிடமிருந்து ராணுவம் மீட்டுள்ளது.

இந்திய எல்லைக்கு அருகே வடமேற்கு சின் மாநிலத்தில் உள்ள டோன்சாங் நகரம், 10 நாள்கள் தொடா் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது.

இதேபோல், தாய்லாந்து உடனான வா்த்தகத்துக்கு முக்கியத்துவமான தெற்கு தனின்தாா்யி பிராந்தியத்தில் உள்ள மாவ்டௌங் நகரை 2 வார கால போராட்டத்துக்குப் பிறகு ராணுவம் செவ்வாய்க்கிழமை தன் வசமாக்கியுள்ளது.

சீன மத்தியஸ்தத்திலான சண்டை நிறுத்தம் மற்றும் கட்டாய ராணுவச் சோ்க்கை மூலம் அதிகரித்துள்ள படை பலத்தால், கடந்த ஆண்டின் மத்தியில் இருந்து இந்த உள்நாட்டுப் போரில் ராணுவத்தின் கை ஓங்கி வருகிறது.