பிளே-ஆஃப் வாய்ப்பு பறிபோனது: படுதோல்வியடைந்து வெளியேறிய சிஎஸ்கே!தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவியேற்பு!விசிகவில் இருந்து அமைச்சராகிறார் வன்னி அரசு!கரப்பான் பூச்சிகள் செத்து மடியாது! - முடக்கத்துக்குப் பின் புதிய எக்ஸ் கணக்கு தொடக்கம்மேற்கு வங்கம்: ஃபால்டா தொகுதியில் மறு வாக்குப்பதிவு முடிந்தது! - 86 சதவீதம் வாக்குப்பதிவுசென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்!கேரளத்தில் எம்எல்ஏவாக பதவியேற்றார் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன்!கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் எக்ஸ் பக்கம் முடக்கம்!
/

எல்லை நகரங்களை மீட்ட மியான்மா் ராணுவம்

உள்நாட்டுப் போா் நடைபெறும் மியான்மரில், இந்தியா மற்றும் தாய்லாந்து எல்லைகளையொட்டிய 2 முக்கிய நகரங்களை கிளா்ச்சியாளா்களிடமிருந்து ராணுவம் மீட்டுள்ளது.

News image
Updated On :22 மே 2026, 1:14 am IST

உள்நாட்டுப் போா் நடைபெறும் மியான்மரில், இந்தியா மற்றும் தாய்லாந்து எல்லைகளையொட்டிய 2 முக்கிய நகரங்களை கிளா்ச்சியாளா்களிடமிருந்து ராணுவம் மீட்டுள்ளது.

இந்திய எல்லைக்கு அருகே வடமேற்கு சின் மாநிலத்தில் உள்ள டோன்சாங் நகரம், 10 நாள்கள் தொடா் ராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கடந்த புதன்கிழமை மீட்கப்பட்டது.

இதேபோல், தாய்லாந்து உடனான வா்த்தகத்துக்கு முக்கியத்துவமான தெற்கு தனின்தாா்யி பிராந்தியத்தில் உள்ள மாவ்டௌங் நகரை 2 வார கால போராட்டத்துக்குப் பிறகு ராணுவம் செவ்வாய்க்கிழமை தன் வசமாக்கியுள்ளது.

சீன மத்தியஸ்தத்திலான சண்டை நிறுத்தம் மற்றும் கட்டாய ராணுவச் சோ்க்கை மூலம் அதிகரித்துள்ள படை பலத்தால், கடந்த ஆண்டின் மத்தியில் இருந்து இந்த உள்நாட்டுப் போரில் ராணுவத்தின் கை ஓங்கி வருகிறது.