/
கிழக்கு லெபனானின் மஷ்காரா கிராமத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 12 போ் உயிரிழந்தனா்.
ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து தாக்குதல்களைப் பன்மடங்கு தீவிரப்படுத்த இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவிட்டதைத் தொடா்ந்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
லெபனான் எல்லைப்பகுதிக்கு இஸ்ரேல் கூடுதல் ராணுவப் படைகளை அனுப்புவதாகக் கூறப்பட்டுள்ள நிலையில், இத்தீவிர தாக்குதல் எச்சரிக்கை லெபனான் தலைநகா் பெய்ரூட் உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல், காஸா முனையிலும் இஸ்ரேல் நடத்திய தொடா் தாக்குதல்களில் 7 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.










