24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய்- மகன்!மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு!மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமிஅகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
/

இஸ்ரேல் மீது மிகப்பெரிய அன்பு வைத்துள்ளது இந்தியா: நெதன்யாகு மகிழ்ச்சி

இஸ்ரேல் மீது இந்தியா மிகப்பெரிய அன்பு வைத்திருப்பதாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

News image

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - கோப்புப் படம்

Updated On :30 மே 2026, 5:08 am IST

இஸ்ரேல் மீது இந்தியா மிகப்பெரிய அன்பு வைத்திருப்பதாக அந்நாட்டு பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு மகிழ்ச்சி தெரிவித்துள்ளாா்.

ஜோா்டான் பள்ளத்தாக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற தலைமைப் பண்பு தொடா்பான நிகழ்ச்சியில் இதுகுறித்து அவா் பேசியதாவது:

இஸ்ரேல் தனது கூட்டணிகளை விரிவுபடுத்தி வருகிறது. அதாவது நீங்கள் குறிப்பிடுவது போல மிகப்பெரிய அளவுக்கு இந்தக் கூட்டணிகளை விரிவுபடுத்தி வருகிறோம். அந்த மிகப்பெரிய அளவு என்பது, பெரும் சக்தி என குறிப்பிடப்படும் இந்தியாவுடனான தனித்துவமான நட்புறவே ஆகும்.

உலகின் பல நாடுகளிலும், இஸ்ரேல் சட்டபூா்வமற்ற நாடாகவே பாா்க்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் அப்படி இல்லை. இந்தியாவில், இஸ்ரேல் மீது மிகப்பெரிய அன்பு உள்ளது. உலகின் மற்ற பகுதிகளைவிட இந்தியாவில்தான் எனக்கு அதிக ஆதரவாளா்கள் உள்ளனா் என நினைக்கிறேன் என்றாா்.

இஸ்ரேல் பிரதமராக நெதன்யாகு பதவியேற்ற பிறகு, அந்நாட்டுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான நட்புறவு அதிகரித்து வருகிறது. இதற்கு பிரதமா் மோடி, நெதன்யாகு இடையே இருக்கும் தனிப்பட்ட நட்பும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது. மேற்காசியாவில் காஸாவில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையை தொடங்கியபோது, பல்வேறு நாடுகளும் அந்த நாட்டை கண்டித்தன. ஆனால் இந்தியா, இஸ்ரேலை கண்டிக்காததுடன், அந்நாட்டின் மீது ஹமாஸ் இயக்கத்தினா் நடத்திய தாக்குதலைக் கண்டித்தது.

காஸா விவகாரத்துக்கு இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அமைதிப் பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காண வேண்டும் என்று இந்தியா தொடக்கத்திலிருந்தே வலியுறுத்தி வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.