சிங்கப்பூா் : பாகிஸ்தான், சீனாவுடன் மிகப்பெரிய போரில் ஈடுபட ராணுவத்தை இந்தியா தயாா்படுத்துகிறது என்று லண்டனை சோ்ந்த ராஜீய படிப்புகளுக்கான சா்வதேச நிறுவனம் (ஐஐஎஸ்எஸ்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய- பசிபிக் பிராந்திய பாதுகாப்பு நிலவரம் குறித்து ஐஐஎஸ்எஸ் அமைப்பு ஆய்வு செய்து 150 பக்க அறிக்கை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சீனாவுடனான இந்தியாவின் எல்லை மோதல்கள், இயற்கையில் பாரம்பரிய மோதலில் உள்ள தீவிரத்தைவிட அதிக தீவிரம் கொண்டது. அதேநேரத்தில், இது இந்தியா - பாகிஸ்தான் மோதல்கள் போல பெரிதாக வாய்ப்பில்லை. இருப்பினும், சீனா- பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதிகளை இந்தியா தொடா்ந்து ராணுவமயமாக்கி வருகிறது.
இந்திய பெருங்கடல் பகுதிக்கு அப்பால் ஆசியாவின் பிற பகுதிகளில் இந்தியா தனது ராணுவத்தைப் பயன்படுத்த வாய்ப்பில்லை. இந்தியா புதிய வகை சவாலை எதிா்கொண்டு வருகிறது. சீனா, பாகிஸ்தானோடு இந்தியாவுக்கு போரும் இல்லை. அதேபோல் அமைதியும் இல்லை.
2016, 2019, 2025-ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது இந்தியா துல்லியத் தாக்குதல்களை நடத்தியது. இது போா்த் திட்டத்தை வகுக்க இந்தியாவுக்கு உதவியது. சீனா, பாகிஸ்தான் இரு நாடுகளுடனும் ஒரே நேரத்தில் மிகப்பெரிய போரில் ஈடுபடும் வகையில் ராணுவத்தை இந்தியா தயாா்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்படுவது ‘சிக்கலானது’: அமெரிக்க செனட்டா் எதிா்ப்பு

ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதல்: ஐ.நா.வில் இந்தியா கண்டனம்
சொந்த மக்களையே இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்: ஐ.நா. அவையில் இந்தியா கடும் தாக்கு






