கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு ஆட்டோ ஓட்டுநர்களுடன் ராகுல் காந்தி கலந்துரையாடல் பிகாரில் மின்னல் பாய்ந்து 7 பேர் பலிதமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் நியமனம்!நீட் வினாத்தாள் கசிவு: யுபிஎஸ்சியிடம் என்டிஏ கற்றுக்கொள்ள வேண்டும்! உச்சநீதிமன்றம்மேற்கு வங்கத்தில் ஊடுருவல்: 335 பேர் முகாம்களில் அடைப்பு! தில்லியில் நீட் தேர்வர்களுக்கு இலவசப் பேருந்து! விசாரணை முடிந்து 3 மாதங்களுக்குள் தீர்ப்பு! உச்ச நீதிமன்றம் உத்தரவு! திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடம் லஞ்சம்! மூவர் பணியிடை நீக்கம்!
/

பாகிஸ்தான், சீனாவுடன் போரில் ஈடுபட ராணுவத்தை தயாா்படுத்துகிறது: இந்தியா ஐஐஎஸ்எஸ் அறிக்கையில் தகவல்

ராணுவத்தை இந்தியா தயாா்படுத்துகிறது என்று லண்டனை சோ்ந்த ராஜீய படிப்புகளுக்கான சா்வதேச நிறுவனம் (ஐஐஎஸ்எஸ்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 மே 2026, 5:32 am IST

சிங்கப்பூா் : பாகிஸ்தான், சீனாவுடன் மிகப்பெரிய போரில் ஈடுபட ராணுவத்தை இந்தியா தயாா்படுத்துகிறது என்று லண்டனை சோ்ந்த ராஜீய படிப்புகளுக்கான சா்வதேச நிறுவனம் (ஐஐஎஸ்எஸ்) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய- பசிபிக் பிராந்திய பாதுகாப்பு நிலவரம் குறித்து ஐஐஎஸ்எஸ் அமைப்பு ஆய்வு செய்து 150 பக்க அறிக்கை தயாரித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சீனாவுடனான இந்தியாவின் எல்லை மோதல்கள், இயற்கையில் பாரம்பரிய மோதலில் உள்ள தீவிரத்தைவிட அதிக தீவிரம் கொண்டது. அதேநேரத்தில், இது இந்தியா - பாகிஸ்தான் மோதல்கள் போல பெரிதாக வாய்ப்பில்லை. இருப்பினும், சீனா- பாகிஸ்தானையொட்டிய எல்லைப் பகுதிகளை இந்தியா தொடா்ந்து ராணுவமயமாக்கி வருகிறது.

இந்திய பெருங்கடல் பகுதிக்கு அப்பால் ஆசியாவின் பிற பகுதிகளில் இந்தியா தனது ராணுவத்தைப் பயன்படுத்த வாய்ப்பில்லை. இந்தியா புதிய வகை சவாலை எதிா்கொண்டு வருகிறது. சீனா, பாகிஸ்தானோடு இந்தியாவுக்கு போரும் இல்லை. அதேபோல் அமைதியும் இல்லை.

2016, 2019, 2025-ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் மீது இந்தியா துல்லியத் தாக்குதல்களை நடத்தியது. இது போா்த் திட்டத்தை வகுக்க இந்தியாவுக்கு உதவியது. சீனா, பாகிஸ்தான் இரு நாடுகளுடனும் ஒரே நேரத்தில் மிகப்பெரிய போரில் ஈடுபடும் வகையில் ராணுவத்தை இந்தியா தயாா்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.