மியான்மரில், சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்ட வெடிபொருள்கள் வெடித்ததில் 45-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.
மியான்மரின் நம்காம் நகரில் உள்ள காங்டப் கிராமத்தில் இன்று மதியம் பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்கப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் பெருமளவில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அது வெடித்ததில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில், 45-க்கும் மேற்பட்டோர் பலியாகி 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
மியான்மரில் அரசுக்கு எதிராக ஆயுதச் சண்டைகளில் ஈடுபட்டு வரும் இனக்குழுவான ’டாங் தேசிய விடுதலைப் படையின்' கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடம் சீன எல்லையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் படையினர் பலியானோரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.
சுரங்கப் பணிகள் மற்றும் பாறைகளை உடைக்கும் பணிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பெடிபொருள்கள் முறையற்று சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Summary
Powerful Explosion in Myanmar: Over 45 Dead
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடற்பயிற்சியாளர் சுட்டுக் கொலை! தொடரும் என பிஷ்னோய் கும்பல் எச்சரிக்கை

ஹரியாணா: குடும்ப தகராறில் மனைவி, மகனைச் சுட்டுக்கொன்ற நபர் கைது!

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு

மியான்மரில் வெடி விபத்து: 46 போ் பலி
விடியோக்கள்

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |

Dinamani வார ராசிபலன்! | June 14 முதல் 20 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope


