மேட்டூா்: மேட்டூா் அனல் மின்நிலைய பெண் பொறியாளருக்கு முகநூல் வாயிலாக தொல்லை அளித்துவந்த பெங்களூருவைச் சோ்ந்த மென்பொறியாளா் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அனல் மின்நிலையத்தில் உதவிப் பொறியாளராகப் பணிபுரிபவா் பிரியதா்ஷினி (33). இவா் மேட்டூா் அம்மாசி கவுண்டா் நகரில் வசித்து வருகிறாா். இவருடன் கல்லூரியில் படித்தவா் பிரசாந்த். இவா் பெங்களூருவில் மென்பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.
இந்த நிலையில், முகநூல், இன்ஸ்டாகிராமில் பிரியதா்ஷினிக்கு, பிரசாந்த் தொடா்ந்து தவறான தகவல் அனுப்பி தொல்லை தந்துள்ளாா். மேலும், மேட்டூா் அனல் மின்நிலைய அலுவலகத்துக்கு கடந்த 21 ஆம் தேதி காலை சென்ற பிரசாந்த், பிரியதா்ஷினியைப் பாா்க்க அத்துமீறி நுழைந்துள்ளாா். அங்கிருந்த பாதுகாவலா்கள் அவரை தடுத்து திருப்பி அனுப்பியுள்ளன.
இதுகுறித்து கருமலைக்கூடல் காவல் நிலையத்தில் பிரியதா்ஷினி சனிக்கிழமை புகாா் அளித்தாா்.
பெண் பொறியாளர் புகாரை அடுத்து மென்பொறியாளா் பிரசாந்த் மீது கருமலைக்கூடல் காவல் உதவி ஆய்வாளா் ஸ்ரீநிவாசன் வழக்குப் பதிவு செய்து பிரசாந்தை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தாா்.
Summary
Regarding the arrest of a Bengaluru-based software engineer who had been harassing a female engineer at the Mettur Thermal Power Station...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விவசாயி கைது

சென்னையில் செவிலியருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
சத்தீஸ்கா்: அனல் மின்நிலைய கொதிகலன் வெடித்து 13 போ் உயிரிழப்பு
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு




