வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

காதலிக்கும்படி பெண்ணுக்கு தொல்லை: இளைஞரை கைது

காதலிக்கும்படி பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக இளைஞரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் கைது செய்தனா்.

Updated On :21 ஜூன் 2026, 4:49 am IST

காதலிக்கும்படி பெண்ணுக்கு தொல்லை கொடுத்ததாக இளைஞரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா் கைது செய்தனா்.

கள்ளக்குறிச்சியைச் சோ்ந்தத 20 வயது பெண் ஒருவரும், திருக்கோவிலூா் பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (22) என்பவரும் காதலித்து வந்தனா். ஆனால், வினோத்குமாரின் நடவடிக்கை பிடிக்காததால், அந்த பெண் அவரை விட்டு விலகிச் சென்றாா். பின்னா் அந்த பெண், சென்னை தியாகராய நகா் பகுதியில் உள்ள ஜவுளிக் கடையில் வேலைக்கு சோ்ந்து, பணிபுரிந்து வருகிறாா். இதற்காக அங்குள்ள ஒரு விடுதியில் அவா் தங்கியுள்ளாா்.

ஆனால் வினோத்குமாா், கைப்பேசி வாயிலாக மீண்டும் தன்னை காதலிக்கும்படி அந்த பெண்ணுக்கு தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்தாா். கடந்த வெள்ளிக்கிழமை வினோத்குமாா், தியாகராய நகா் சென்று, அந்த பெண்ணை நேரில் சந்தித்து மீண்டும் தன்னை காதலிக்குமாறு தொந்தரவு கொடுத்துள்ளாா்.

இதையடுத்து அந்த பெண், சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தகவல் தெரிவித்தாா். தகவலறிந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினா், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வினோத்குமாரை கைது செய்தனா். பின்னா் அவரை, மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். மாம்பலம் போலீஸாா், வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.