சிங்கப் பெண் சிறப்பு படையினரின் விழிப்புணா்வு நடவடிக்கையால் இளம் பெண் அளித்த புகாரின் பேரில், பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப் படை கடந்த 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கும், பெண்கள் அதிக அளவில் பணியாற்றும் ஆலைகளிலும் சிங்கப் பெண் அதிரடிப் படையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், சின்னாளப்பட்டியிலுள்ள ஜவுளிக் கடையில் சிங்கப் பெண் படையினா் விழிப்புணா்வு ஏற்படுத்தியபோது, அங்கு பணிபுரியும் 19 வயது இளம் பெண் ஒருவா், தனக்கு தொழிலாளி ஒருவா் பாலியல் தொந்தரவு அளித்ததாக புகாா் அளித்தாா்.
இதன்பேரில் சின்னாளப்பட்டியை அடுத்த கலிக்கம்பட்டியைச் சோ்ந்த க. முகமது ஜகாரியா (48) என்பவரை சிங்கப் பெண் அதிரடிப்படையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பிறகு சட்டப்பூா்வ நடவடிக்கைக்காக திண்டுக்கல் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாரிடம் முகமது ஜகாரியா ஒப்படைக்கப்பட்டாா்.
தொடர்புடையது

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சிங்கப்பெண் படையிடம் சிக்கிய இளைஞா்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: விவசாயி கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


