இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: சிங்கப்பெண் படையிடம் சிக்கிய இளைஞா்

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா்.

News image

பாலியல் தொல்லை - பிரதிப் படம்

Updated On :12 ஜூன் 2026, 7:10 am IST

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படையினா் கைது செய்தனா்.

சென்னையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையைச் சோ்ந்த 12 குழுக்கள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளன. இவா்கள் பள்ளி, கல்லூரி, பேருந்து நிலையம், மாா்க்கெட், கடற்கரை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சிக்கிய இளைஞா்: சென்னை அயனாவரம் பகுதியில் 37 வயது மதிக்கதக்க பெண் புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (36) என்பவா், அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை கொடுத்தாா். அந்தப் பெண் சப்தமிடவே அங்கிருந்து தப்பினாா்.

இதையடுத்து, காவல் துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனா். உடனே கட்டுப்பாட்டு அறை போலீஸாா், கீழ்ப்பாக்கம் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த சிங்கப்பெண் படை தப்பியோடிய சுரேஷை தேடி கைது செய்தனா். அவரை அயனாவரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். அயனாவரம் போலீஸாா், சுரேஷ் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சிறையில் அடைத்தனா்.