தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சிங்கப்பூரில் கரோனா பாதிப்பு 2,299; பலி 8 ஆக உயர்வு

சிங்கப்பூரில்  சனிக்கிழமை ஒரே நாளில் கரோனா நோய்த்தொற்றுக்கு புதிதாக 191 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,299 ஆக அதிகரித்துள்ளது.

News image
Updated On :12 ஏப்ரல் 2020, 6:02 am

சிங்கப்பூரில் கரோனா நோய்த்தொற்றுக்கு சனிக்கிழமை ஒரே நாளில் புதிதாக 191 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,299 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 90 வயதுடைய முதியவர் ஒருவர் நோய்த்தொற்றால் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக நோய்த்தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து சிங்கப்பூரில் முழு வீச்சில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் சிங்கப்பூர் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சிங்கப்பூரில் சனிக்கிழமை ஒரே நாளில் 191 பேருக்கு நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதையடுத்து சிங்கப்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2,299 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே 90 வயது முதியவர் ஒருவர் தொற்றுக்கு உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

சிங்கப்பூரில் கடந்த 8-ஆம் தேதி 32 வயது இந்தியா் ஒருவா் உயிரிழந்துவிட்டாா். அவா் கரோனாவால் உயிரிழக்கவில்லை; இதயப் பிரச்னை காரணமாவே உயிரிழந்தாா் என்பது உடல்கூராய்வில் உறுதி செய்யப்பட்டது. விமானப் போக்குவரத்து இல்லாத காரணத்தால் அவரது உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க முடியவில்லை என அந்நாட்டு அரசு கூறியிருந்தது நினைவில்கொள்ளத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.